search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லலித் மோடியுடன் டேட்டிங்... மவுனம் கலைத்த சுஷ்மிதா சென்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    லலித் மோடியுடன் டேட்டிங்... மவுனம் கலைத்த சுஷ்மிதா சென்

    • திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
    • இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பை:

    லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

    திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் சுஷ்மிதா சென், இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென், முன்னாள் ஐபிஏல் தலைவர் லலித் மோடியின் டீவிட்-க்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    1994-ஆம் ஆண்டு நடைபெற்ற 43வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்ற சுஸ்மிதா சென் பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் சுஸ்மிதா சென்னுக்கு தற்போது வயது 46. திருமணம் செய்யாமல் இருக்கும் சுஸ்மிதா சென், ரெணி மற்றும் அலிசா என்ற இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி, நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் இருந்தனர். லலித் மோடி, சுஷ்மிதாவை திருமணம் செய்துகொண்டாரா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

    இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று" என்று கூறியுள்ளார்.

    பிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் தமிழ் திரையுலகில் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×