search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயவிற்பனை"

    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தபோது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
    • அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது, விரியூர் கிராமத்தை சேர்ந்த ரோசாலி (வயது60) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • போலீசார் ரோசாலியை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக வேலாயுதம்(52) என்பவரையும் கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, ஜெயமணி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரியூர் கிராமத்தை சேர்ந்த ரோசாலி (வயது60) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம்(52) என்பவரையும் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீ சார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கணபதி(26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீ சார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த நாட்டான் மகன் கணபதி(26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • 5 பேரை கைது செய்து அவர்கிளிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த அசோதை(வயது38) என்பவர் வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார், உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி(43), நெடுமானூரை சேர்ந்த முத்தம்மாள்(38), அரசம்பட்டை சேர்ந்த ரமேஷ்(43) ஆகியோர் வீட்டின் அருகே சாராயம் விற்றதாக 3 பேரையும் காவலர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 310 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மேல் சிறுவள்ளூர் (சாத்தனூர்) வலதுபுற கால்வாய் பகுதியில் ரோந்து பணயில் ஈடுபட்டனர். அப்போதும் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பூங்கான்(51) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • முருகன்(வயது 45) என்கிற வெள்ளரி முருகன் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை பார்த்ததும் மூன்றுபேரும் தப்பியோடினர்.


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் கிழக்கு தெருவைச் சேர்ந்த முருகன்(வயது 45) என்கிற வெள்ளரி முருகன் தனது வீட்டின் பின்புறம் சாரயம் விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றபோது முருகன் சாரயம் விற்றுக் கொண்டிருந்தார்

    . அப்போது போலீசாரை பார்த்ததும் முருகனுடன் இருந்த அமாவாசை அவரது மனவைி லதா(42), மற்றும் வெள்ளரி முருகனின் தாயார் ராஜம்(60) ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் முருகனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

    ×