search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமிதரிசனம்"

    • ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர்.
    • தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

    புதுச்சேரி:

    2 ஆயிரம் நோட்டு தடையால் எந்த பலனும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீதார்பார ண்யேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள் உள்ளிட் ட சுவாமிகளை அவர் தரிசனம் செய்தார். இறுதியாக சனீஸ்வரர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர்.  தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக கூறுகின்றனர். இது கண்துடைப்பு நாடகம். இதனால் எந்த பலனும் இல்லை. கர்நாட காவில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு விஜயகாந்த் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பதாக கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் உள்ளதாக முன்பு கருத்து கூறிய கனிமொழி எம்.பி. தற்போது அது குறித்து பேச மறுக்கிறார். தமிழகம் முழுவதும் தி.மு.க .வினர் கள்ளச்சா ராயம் விற்பனை யில் ஈடுபட்டுள்ளனர். இது தான் திராவிடமாடலா. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுவை மாநில செயலாளர் வேலு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜபதி உடன் இருந்தனர்.

    ×