search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்பாபு"

    • நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
    • அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் சூர்யா, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.



    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். இதையடுத்து இவரது உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



    அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    • நடிகர் சரத்பாபுசரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார்.
    • இவரது உடல் சென்னை தி.நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


    சரத்பாபு -ரஜினி

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இவரது உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, நான் நடிகனாகுவதற்கு முன்பே எனக்கு சரத்பாபுவை தெரியும். அருமையான மனிதர், நல்ல நண்பர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அவர் கோபத்துடன் இருந்து நான் பார்த்ததே இல்லை.


    சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி

    நான் அவருடன் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என் மேல் அவருக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. நான் புகைப்பிடிப்பதை பார்த்து வருத்தப்படுவார். புகைப்பிடிப்பதை நிறுத்து ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று கூறுவார். அவர் இருந்தால் நான் புகைப்பிடிக்க மாட்டேன். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியவர் இப்போது இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று பேசினார்.

    • நடிகர் சரத்பாபு சின தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலமானார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதையடுத்து இவரது உடல் சென்னை, தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை சுஹாசினி இவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, அவர் கடந்த 92 நாட்களாக மருத்துவமனையில் இருந்தார். அவர் காய்ச்சல் காரணமாக பெங்களூர் சென்றார். ஆனால் அங்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் அவருக்கு மல்டிபிள் மய்லோமா என்ற நோய் இருப்பதை கண்டறிந்தனர்.


    ஐதராபாத்தில் அவருடைய சகோதரர்கள் இருந்ததால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நானும் சிரஞ்சீவியும் மருத்துவர்களிடம் பேசினோம். அப்போது எங்களால் காப்பாற்ற முடிந்த அளவிற்கு நாங்கள் காப்பாற்றுவோம் என்று கூறினார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் முடியாமல் நேற்று சரத்பாபு காலமானார். அவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை தமிழ்நாட்டில் நம்ம குடும்பத்தைச் சேர்ந்தவராக தான் நாம் கவுரவித்துக் கொண்டிருந்தோம். அவர் நடித்த படங்களிலே தமிழ் படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார்.


    திரைத்துறையிலே இவ்வளவு மரியாதைக்குரிய எல்லா மொழிகளும் பேசக்கூடிய ஒருவரை நாங்கள் பார்த்ததில்லை என்று தான் கூற வேண்டும். சரத்பாபுவிற்கு நண்பராக இல்லாத ஒருவர் இந்த திரைத்துறையில் இல்லை. அவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அப்படி இருந்தும் அவருக்கு மல்டிபிள் மய்லோமா என்ற நோய் இருந்தது. இந்த நோய் நான்காவது கட்டத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. முடிந்த அளவிற்கு திரைத்துறையில் எல்லோரும் அவருக்கு உதவ நினைத்தோம். அவரது இழப்பு மிகப்பெரிய இழப்பு தான்" என்று பேசினார்.

    நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று சென்னை, கிண்டியில் மதியம் இரண்டு மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் சரத்பாபு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



    இந்நிலையில், மறைந்த நடிகர் சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
    • இவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


    சரத்பாபு

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், மறைந்த நடிகர் சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.


    மு.க.ஸ்டாலின் அறிக்கை

    நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற ஏராளமான திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் தமிழ் இரசிகர்களால் நினைவுக்கூரப்படுகிறது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என அவர் தெரிவித்துள்ளார்.


    • நடிகர் சரத்பாபு இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    இந்நிலையில், சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.


    • 1977 ஆண்டு பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சரத்பாபு.
    • நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் சரத்பாபு இணைந்து நடித்துள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சரத்பாபு, ஜூலை 31ம் தேதி, 1951 ஆண்டு பிறந்தார். சத்யம் பாபு தீட்சிதுலு என்ற தனது பெயரை திரையுலகிற்காக சரத்பாபு என்று மாற்றிக் கொண்டார். இவர் 1973 ஆம் ஆண்டு ராமராஜ்யம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.



    அதன்பின்னர் 1977 ஆண்டு தமிழில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முடி சூடா மன்னன், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, முத்து, அண்ணாமலை, முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.



    முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலின் மூலம் சரத்பாபு ரசிகர்கள் மத்தியில் இன்று வரை அறியப்பட்டு கொண்டிருக்கிறார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு, நடிகர் கமல், ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.



    இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழி படங்களில் நடித்து கவனம் பெற்றார். 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபு, கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2023ம் ஆண்டு தமிழில் பாபி சிம்ஹா, காஷ்மிரா பர்தேசி நடிப்பில் வெளியான வசந்த முல்லை படத்தில் நடித்திருந்தார்.



    சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை காரணமாக ஏப்ரல் 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு மறைந்ததாக தகவல்கள் பரவியது. பின்னர் சரத்பாபு நலமுடன் இருப்பதாக அவர் தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டது.



    தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று காலமானார். திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி அனைவரையும் கவர்ந்து வந்த சரத்பாபுவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சரத்பாபு இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் தனது கலைப்பணியால் என்றென்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

    • நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று காலமானார்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.


    சரத்பாபு

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    தயாரிப்பாளர் கே பாலாஜி -கமல்ஹாசன் -சரத்பாபு

    இந்நிலையில், சரத்பாபு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி" என்று வருத்தமாக பதிவிட்டுள்ளார்.


    • கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் சரத்பாபு அனுமதிக்கப்பட்டார்.
    • நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

    நடிகர் சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சரத்பாபுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இவருடைய உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும், இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


    சரத்பாபு

    சரத்பாபு

    சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 20 ஆம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

    • தமிழில் 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சரத்பாபு.
    • இவர் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார்.

    1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.


    இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×