search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு ஊழியர்கள் போராட்டம்"

    • 72 மணிநேரம் பட்டினியாக இருந்து எங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே போராட்டத்தின் நோக்கம்.
    • அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணிநேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது.

    காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இன்று முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர்.

    போராட்டத்துக்கு மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி, மாநில துணைத் தலைவர்கள் பேயத் தேவன், பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, ஜெயந்தி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச்செல்வி, லதா, நிர்மலா ஜெஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மைய பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் வாசுகி, சுகந்தி சீனிவாசன், சரவணத்தமிழன், சாம்ராஜ், ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு கலந்துகொண்டு பேசுகிறார். போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து மலர்விழி கூறியதாவது:-

    காலை முறை ஊதியம், ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தால் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சமையலர்கள், உதவியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 72 மணிநேரம் பட்டினியாக இருந்து எங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இந்த போராட்டத்தின் நோக்கம். அரசு எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவஅதிசயம் தலைமை தாங்கினார்.
    • 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்த்திட பேரணி நடை பெற்றது.

    இந்த பேரணிக்கு தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவஅதிசயம் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் நாகராஜன், இளையராஜா மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திவ்யா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்குவோம். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மேலும் ஒட்டுமொத்த தொகை ரூபாய் 5 லட்சம், காலி பணியிடங்களை நிரப்புவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    ×