என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோத்ரா ரெயில் எரிப்பு
நீங்கள் தேடியது "கோத்ரா ரெயில் எரிப்பு"
கரசேவகர்கள் சென்ற சபர்மதி ரெயில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ராவில் வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டதில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
வதோதரா:
கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பிலால் இஸ்மாயில் அப்துல் மஜித் என்ற ஹாஜி பிலால் (வயது 61), வதோதரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், பிலால் உடல்நிலை கடந்த 22ம் தேதி மோசமடைந்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இத்தகவலை துணை கமிஷனர் ரஜோர் உறுதி செய்தார்.
கரசேவகர்கள் சென்ற சபர்மதி ரெயில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி கோத்ராவில் வன்முறைக் கும்பலால் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பிலால் உள்ளிட்ட 11 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். முதலில் இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X