என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் கலவர வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் 26-ம் தேதி விசாரணை
Byமாலை மலர்19 Nov 2018 9:14 AM GMT (Updated: 19 Nov 2018 10:13 AM GMT)
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் விசாரணையை 26-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #Gujaratriots #SChearing #ZakiaJafriplea
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் 28-2-2002 அன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் அந்நாள் முதல் மந்திரி நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவினரால் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்கியா ஜாப்ரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறப்பு புலனாய்வு குழுவின் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக சமூக ஆர்வலர் டீஸ்ட்டா சீட்டல்வாட் இணைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Gujaratriots #SChearing #ZakiaJafriplea
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்துக்கு மறுநாள் 28-2-2002 அன்று நரோடா பாட்டியா என்ற இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் 97 சிறுபான்மையினர் கோரமாக கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கில் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி, முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 70 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மாயா கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32 பேரை குற்றவாளிகள் என கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறப்பு புலனாய்வு குழுவின் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக சமூக ஆர்வலர் டீஸ்ட்டா சீட்டல்வாட் இணைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என குறிப்பிட்ட நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Gujaratriots #SChearing #ZakiaJafriplea
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X