search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் கலவர வழக்கு - மோடிக்கு எதிரான விசாரணை ஜனவரி மாதம் தள்ளிவைப்பு
    X

    குஜராத் கலவர வழக்கு - மோடிக்கு எதிரான விசாரணை ஜனவரி மாதம் தள்ளிவைப்பு

    குஜராத் கலவர வழக்கில் இருந்து மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பெண் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #GujaratRiots #SC
    புதுடெல்லி:

    கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் பெரும் கலவரம் நடந்தது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.

    அதில், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திரமோடிக்கு சம்பந்தம் இல்லை எனக்கோரி அவரை விடுவித்தது. அதை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இஷான் ஜப்ரியின் மனைவி ஷாகியா ஜாப்ரி குஜராத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி ஷாகியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஷாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    வழக்கு விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். #GujaratRiots #SC
    Next Story
    ×