search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுக்கு விசாரணை"

    பத்திரிகையாளர் பிரியா ரமணி அளித்த பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பரிடம் டெல்லி நீதிமன்றம் இன்றும் குறுக்கு விசாரணை நடத்தியது.
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் கடந்த ஆண்டு டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்தனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.



    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

    இவ்வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    இவ்வழக்கில் நேற்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் எம்.ஜே.அக்பர் ஆஜரானார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பிரியா ரமணியின் வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் அக்பரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    அவர் கேட்ட பல கேள்விகளுக்கு நினைவில்லை. நீங்கள் சொல்வது சரியல்ல என்று அக்பர் பதிலளித்தார். பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு  மாஜிஸ்திரேட் சமர் விஷால் ஒத்திவைத்தார்.
     
    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபாவிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். #JayaDeathProbe #Deepa
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதுபற்றி அறிந்தவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். சசிகலா தரப்பு வக்கீல் அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.

    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அருகில் இருந்து கவனித்து கொண்ட செவிலியர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

    இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டியவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து அவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணனும் இன்று ஆஜர் ஆனார். அவரிடமும் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் ஜோசப்பும் ஆஜரானார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #JayaDeathProbe #Deepa
    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று எய்ம்ஸ் டாக்டர்கள் 2-வது நாளாக விசாரணை ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #Jayadeathprobe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 80-க்கும் அதிகமான பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்களான இதயவியல் நிபுணர் நிதிஷ்நாயக், நுரையீரல் நிபுணர் கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிகா ஆகியோர் நேற்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த சிகிச்சையை மேற்பார்வையிட்டோம் என்றும் தெரிவித்தனர்.



    ஜெயலலிதா சுவாசிக்க மிகுந்த சிரமப்பட்டார். அவர் பெரும்பாலான நேரங்களில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசத்தில் இருந்தார் என்றும் கூறி இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து இன்று எய்ம்ஸ் டாக்டர்கள் 2-வது நாளாக விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    இந்த குறுக்கு விசாரணை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. #Jayadeathprobe

    ஜெயலலிதாவை சசிகலா பாசமாக பார்த்துக்கொண்டார் என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் ஏற்கனவே ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    அதன்படி, ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவரிடம் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம்(இவர், தற்போது கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆணையராக உள்ளார்), ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.



    தீபா குறித்து ஏற்கனவே ஆணையத்தில் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக தீபக்கிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்த போது, தீபா ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் அவரை ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனதாகவும், இதன்காரணமாக அவரை போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய போது, சசிகலாவையும் அத்தை என்று தான் அழைப்பேன் என்றும், சசிகலா மிகப்பிரியமாக பாசமாக ஜெயலலிதாவை பார்த்துக்கொண்டார் என்றும் கூறி உள்ளார்.

    மேலும், 4.12.2016 அன்று மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும், ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் குறுக்கு விசாரணையின் போது பதில் அளித்துள்ளார்.



    குறுக்கு விசாரணை முடிவடைந்து ஆணையத்தில் இருந்து வெளியே வந்த பூங்குன்றன் நிருபர்களிடம், ‘குறுக்கு விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என்றார்.

    குறுக்கு விசாரணை முடித்துக்கொண்டு வெளியே வந்த வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆணையம் வெளியிட்டது அதிர்ச்சியாகவே இருந்தது. ஆணையம் ஒரு முடிவு எடுக்கும்போது அதில் தலையிட முடியாது.

    ஆணையம் அனைத்து தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்த பின்பு தான் நாங்கள் யார், யாரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்களில் முக்கியமானவர்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். அவர்களைத் தான் ஆணையம் முதலில் விசாரித்து இருக்க வேண்டும். இதுவரை அவர்களை விசாரிக்கவில்லை. இருந்தபோதிலும் அதற்கான காலம் ஆணையத்துக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது’ என்றார்.

    ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அவரிடம் ஏற்கனவே சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்தநிலையில் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்டதை தொடர்ந்து கார்த்திகேயன் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் ஆணையத்தின் வக்கீல் மதுரை பார்த்தசாரதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

    விசாரணையின் போது அவர், சசிகலா மூலம் தான் ஜெயலலிதாவின் உதவியாளராக பணியில் சேர்ந்ததாகவும், ஜெயலலிதா, சசிகலாவை சொல்வதை மட்டும் தான் செய்வேன் என்று கூறி உள்ளார். அதற்கு ஆணையத்தின் வக்கீல், ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை. அப்படியென்றால் தற்போது சசிகலா சொல்வதுபடி தான் செயல்படுவீர்கள், செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் சரிதானா என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று பதில் அளித்த கார்த்திகேயன், தனக்கு சசிகலா தான் சம்பளம் கொடுப்பதாகவும் கூறி உள்ளார்.

    ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் மேற்கொண்டு விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல், நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து பூங்குன்றனை வேறொரு தேதியில் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.  #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission 
    ×