search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை நோய்"

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது.
    • உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    டென்மார்க்கில் 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிப்புக்கு ஆளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. பின்னர் இந்த நோய் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.
    • மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ஜெனீவா:

    கொரோனா தொற்றுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 89 நாடுகளில் 27 ஆயிரத்து 814 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1958-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்டபோதுதான் இந்த நோய்க்கு குரங்கு அம்மை என்று பெயர் சூட்டப்பட்டது.

    இந்த நிலையில், குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

    மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குரங்கு அம்மை மாறுபாடுகளுக்கு கிளேட் 1, மேற்கு ஆப்பிரிக்காவில் கிளேட் 2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிளேட்-2 வைரஸ், 2 துணை வைரஸ்களை கொண்டுள்ளது. அவை கிளேட் 2-ஏ, கிளேட் 2-பி என அழைக்கப்படும். உலகளாவிய நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

    தற்போது உலகளவில் பரவி வருவது கிளேட் 2-பி வைரஸ் ஆகும். புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ்கள், தொடர்புள்ள நோய்கள் மற்றும் வைரஸ் மாறுபாடுகள் எந்தவொரு கலாசார, சமூக, தேசிய, பிராந்திய தொழில் முறை மற்றும் இனக்குழுக்களுக்கு தீங்கு ஏற்படுத்துவதைத் தவிர்க்கிற வகையிலும், வர்த்தக சுற்றுலா, சுற்றுலா அல்லது பிராணிகள் நலனில் எதிர்மறை விளைவுகளை குறைக்கும் விதத்திலும் இந்தப் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

    • குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது.
    • குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சைகள் இல்லை.

    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, குரங்கு அம்மை உலகளவில் பரவும் திறன் கொண்டது. இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதோடு முதல் உயிர்பலியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்களை பார்ப்போம்.

    குரங்கு அம்மை நோய் என்றால் என்ன?

    1958-ம் ஆண்டு ஆய்வக நோக்கக்களுக்காக பயன்படுத்தப்பட்ட குரங்குகளில் இருந்து இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் குரங்கு அம்மை என்று பெயரிடப்பட்டது.

    இந்த நோய் பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. தற்போது உலகமெங்கும் பரவ தொடங்கியுள்ளது.

    குரங்கு அம்மை நோய் எவ்வாறு பரவுகிறது?

    இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. நோய் பாதிப்புக்குள்ளான நபருடன் தொடர்புகொள்வது, அவர்கள் பயன்படுத்திய அசுத்தமான படுக்கையை தொடுவது, நோய் பாதிப்புக்குள்ளான விலங்கு கடிப்பது, பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகளை தொடுவது போன்றவை மூலம் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

    குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் என்னென்ன?

    முகம் அல்லது உடலின் பிற பகுதிகளில் தடிப்பு, கொப்புளங்கள் உருவாகுவது, காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடல் குளிர்ச்சி அடைவது, சோர்வு ஏற்படுவது, வீக்கம் உண்டாவது போன்றவை குரங்கு அம்மை நோயின் சில அறிகுறிகளாகும். இத்தகைய அறிகுறிகள் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

    குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினரும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டால், உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல் பிறந்த குழந்தைகள், சிறு வயது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்களும் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

    குரங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன?

    இது பொதுவாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானால் சோர்ந்து விடாமல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கேற்ப உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை தொற்றை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

    குரங்கு அம்மை பாதிப்பை எவ்வாறு தடுக்கலாம்?

    பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். சோப் பயன் படுத்தி கைகளை கழுவ வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பகுதிகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மற்றவர்களிடம் இருந்து விலகி, தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

    குரங்கு அம்மை பாதிப்பு ஏன் கவலைக்குரியது?

    ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட பத்து நோயாளிகளில் ஒருவர் இறக்கிறார். அவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக உள்ளனர். இருப்பினும் லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் சில வாரங்களில் முழுமையாக நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவிடுவார்கள். இந்த வைரஸ் பொதுவாக சுவாசப் பாதை, கண்கள், மூக்கு அல்லது வாய் பகுதியில் வீக்கம், காயங்களை ஏற்படுத்தும். மருத்துவ ஆலோசனையை முறையாக பின்பற்றுவதன் மூலம் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.

    எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம்?

    குரங்கு அம்மைக்கு முறையான சிகிச்சைகள் இல்லை. இருப்பினும், பெரியம்மை தடுப்பூசி மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம்.

    குரங்கு அம்மையை ஏற்படுத்தும் வைரஸ், பிளவிவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. ஒட்டுண்ணிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் மூலம் பரவுகிறது. மனிதர்கள் மற்றும் குரங்குகள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். முதன் முதலில் 1957-ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் பல குரங்குகள் இறந்தன. அதன் பின்னர் மக்கள் நோய்வாய்ப்பட்டனர்.

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் இந்தியாவின் கேரளாவிலும் பரவி வருகிறது.

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு முதன்முதலாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களையும் சேர்த்து குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    இதையடுத்து குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கேரளாவின் நெடும்பாசசேரி விமான நிலையத்தில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த அந்த வாலிபர் உடனடியாக ஆலுவாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    • குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது.
    • குரங்கு அம்மை பரவலைத் தடுக்க இதையெல்லாம் செய்யக்கூடாது

    உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

    இந்த நோய் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. 8 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்த நோய் பாதிப்புக்குள்ளான ஒரு வாலிபர் கேரளாவில் உயிரிழந்தும் உள்ளார்.

    இந்த நிலையில் இந்தியாவில் இந்த தொற்று நோய் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    என்ன செய்ய வேண்டும்?

    குரங்கு அம்மை பாதிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றால்:-

    * குரங்கு அம்மை பாதித்த நபர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

    * கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு, தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வர வேண்டும்.

    * நோய் தாக்கிய நபர் அருகே செல்கிறபோது வாயை நன்றாக மறைக்கிற விதத்தில் முககவசமும், கைககளில் கையுறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும்.

    * குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நபர் இருப்பிட சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

    என்ன செய்யக்கூடாது?

    குரங்கு அம்மை பரவலைத் தடுக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது என்றால்-

    * குரங்கு அம்மை பாதித்த நபரின் படுக்கை, உடைகள், துண்டுகள் உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

    * குரங்கு அம்மை பாதித்தவர்களின் துணிகளுடன் மற்றவர்களின் துணிகளை துவைக்கக்கூடாது.

    * குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது.

    * குரங்கு அம்மை பாதித்த நபர்களை, பாதிப்பு இருக்கலாமோ என சந்தேகிக்கிற நபர்களை களங்கப்படுத்தக்கூடாது. தவறான தகவல்களை, வதந்திகளை நம்பக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் 5 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 5 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

    * இரு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

    * குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

    * குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

    * நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைத்தல் கூடாது.

    * குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலப்புரம் பகுதியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
    • கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் ஒருவருக்கும் இதே பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் கடந்த 27-ந் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்தார். அவருக்கு லேசான காய்ச்சலும், கொப்பளங்களும் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது.

    இவரையும் சேர்த்து கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    • உயிரிழந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்தது உண்மை தான்.
    • இதுவரை குரங்கு அம்மையால் இறப்பு பதிவாகவில்லை.

    சென்னை :

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:-

    ரூ.3.8 லட்சம் செலவில், ஆஸ்பத்திரி மருத்துவக் கல்லூரிகளுக்கு வருகிற தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு 3 தங்கும் அறைகள், ரூ.5.85 லட்சத்தில் விசாகா குழு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிகிற டாக்டர்களுக்கு உணவருந்துவதற்கும், இடைவெளி நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கும் ரூ.18.5 லட்சத்தில் 2 அறைகள், அதே போல் ரூ.6.8 லட்சம் செலவில் சுற்றுச்சுவருடன் கூடிய ராட்சத மீன் தொட்டி, ரூ.14.9 லட்சம் செலவில் சிறப்பு சிகிச்சை அறை ஒன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் மருத்துவ கல்வியாளர்களுக்கு தங்களது கற்பிக்கும் திறனை வளர்க்க இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கு தொழில்நுட்பத்திற்கான தேசிய மருத்துவ கவுன்சிலின் மூலம் மண்டல மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

    முதல்முறையாக மாநில அரசாங்கங்கள் நடத்துகின்ற மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு 2 இடங்களில் மண்டல மையம் அமைக்க மத்திய அரசு, வாய்ப்பு அளித்துள்ளது.

    அந்தவகையில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு மருத்துவக் கல்லூரிகள் 4-ம், தனியார் கல்லூரிகள் 7-ம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தலா 2 ஆஸ்பத்திரிகளும் இன்று இணைக்கப்பட்டு 15 மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், பயிற்சி பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கேரளாவில் குரங்கு அம்மை நோயால் வாலிபர் ஒருவர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார் என்பது உறுதி படுத்தப்படவில்லை. கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் இதுகுறித்து பேசும்போது, உயிரிழந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்தது உண்மை தான். ஆனால் அதனால் தான் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் பாதிப்பால் உயிரிழந்தாரா? என்பது குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் இது குறித்து தெரிய வரும் என்றார்.

    ஆப்பிரிக்க நாடுகளை தவிர்த்து ஏறக்குறைய 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புள்ளது. இந்த நாடுகளில் இதுவரை குரங்கு அம்மையால் இறப்பு பதிவாகவில்லை. இந்தியாவில் முதல்முறையாக அவ்வாறு ஏற்பட்ட இறப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுவரை இதை குரங்கு அம்மைக்கான இறப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஆய்வறிக்கை வந்த பிறகு தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
    • உடலில் லேசான கொப்புளங்கள் காணப்பட்டதால் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி என கருதி 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    இந்தியாவில் கேரளா மாநிலத்தில் தான் முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்தது.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒருவருக்கு இதே பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    கேரளா மாநில எல்லையில் குமரி மாவட்டம் அமைந்திருப்பதால் அங்கிருந்து குமரி மாவட்டத்திற்குள் குரங்கு அம்மை நோய் பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் 10 வயது மகன், மகள் என 4 பேர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டது தெரியவந்தது.

    அவர்களின் உடலில் லேசான கொப்புளங்கள் காணப்பட்டதால் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி என கருதி 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    தனி வார்டில் 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சாதாரண அம்மை நோய் பாதிப்பு மட்டுமே உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இருப்பினும் 4 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் வர 2 நாள் ஆகும் என்பதால், சாதாரண அம்மை நோய்க்கான சிகிச்சையை டாக்டர்கள் அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் புனேவில் இருந்து 4 பேரின் ஆய்வு முடிவுகளும் இன்று ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளது. அதில் 4 பேருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்

    • உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

    சேலம்:

    உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

    இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கேரளா, டெல்லி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை தொற்று உறுதியானதால் மாநில எல்லைகளில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கவும் விமான நிலையங்களில் சுகாதார துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. இருப்பினும் சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சேலம் விமான நிலையத்தில் பரிசோதனக்கு பிறகே பயணிகள் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

    • பிற நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை கேரளா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது.
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர் உடல் நலம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    உடுமலை:

    பிற நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை கேரளா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை தொற்றுநோய் தொடர்பாக அவசர நிலை அறிவித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், அண்டை மாநில எல்லைகள், சர்வதேச விமான போக்கு வரத்து நிலையங்கள் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் உடல் நலம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஒன்பதாறு சோதனை சாவடி (தமிழக - கேரள எல்லை) கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டாக்டர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-

    கேரளா எல்லை, ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்தவர்களாக இருப்பினும் அவர்கள் விபரம் பெறப்பட்டு, 21 நாட்கள் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது.

    பிற நாடுகளில் இருந்து வருவோர் பெயர், முகவரி, விபரங்கள் பெறப்படுகிறது. வெளிநாடு சென்று திரும்புவோர் ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருந்தால் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×