search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டைகள்"

    • காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
    • வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. அங்கு கரடி, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு விலங்குள் வாழ்கின்றன.

    நீலகிரியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. எனவே காட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

    எனவே காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்போது அவை குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று அங்கு உள்ள விளை நிலங்களை நாசப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன.

    இந்த நிலையில்கூடலூா் வனச்சரகத்தில் குடிநீா் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக 2022-23ம் ஆண்டு நபாா்டு திட்டத்தின் கீழ், வன விலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தடுப்பணைகள் மற்றும் கசிவுநீா் குட்டைகள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் யானை, புலி போன்ற வன விலங்குகளின் நீா்த்தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். மேலும் காட்டு விலங்குள் ஊருக்குள் வருவதும் கட்டுப்படுத்தபடும்என்று வனத்துறையினா் தெரிவித்து உள்ளனா்.

    • பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் 1997 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கதிறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தல் ஆகிய தொலைநோக்கு திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது முதல்கட்டமாக 2021-22ஆம் ஆண்டு 73 கிராம பஞ்சாயத்துக்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் மாபெரும் திட்டமாகும்.

    இந்த திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு சாகுபடி நிலமாக மாற்றப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 310.5 ஏக்கர் நிலங்களில் 14 தரிசு தொகுப்புகள் கண்டறியபட்டு அதில் உள்ள முட்புதர்களை அகற்றி, திருத்தம் செய்து வேளாண் பொறியியல் துறையுடன் ஆழ்துளைகிணறுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அது மட்டுமின்றி இத்திட்டத்தின் கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு மூன்று தென்னை மரக்கன்றுகள் வீதம் ஒரு கிராமத்திற்கு 200 பண்ணை குடும்பங்களுக்கு 43,800 தென்னை கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    வரப்பு பயிரை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்களில் ஒரு எக்டருக்கு 5 கிலோ உளுந்து விதைகள் மானியத்தில் கொடுக்கப்பட்டு ஒரு கிராமத்திற்கு 15 எக்டர் வீதம் வரப்பு பயிர்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் ஒரு கிராமத்திற்கு ஐந்து வீதம் கொடுக்கப்பட்டு மொத்தம் 730 தெளிப்பான்கள் 50 சதவீதத்தில் மானியத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் தோட்டக்கலை துறையினரால் வீட்டு தோட்டம் அமைவதற்கான நெகிழி க்கூடைகள் பிளாஸ்டிக் ட்ரம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வரப்பு ஓரங்களில் பல வகையான செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

    வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறுகள், பண்ணை குட்டைகள், தூர்வாருதல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கால்நடைகளின் நலம் காத்து பால் உற்பத்தினை பெறுகிற கால்நடை துறையின் மூலம் கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் புதிய பால் சொசைட்டிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கூடுதலாக 80 சதவீத இதர திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படுகிறது.

    ஒரு கிராம பஞ்சாயத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டமானது சிறப்பாக வடிவமைக்கபட்டு செயல்படுத்தபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டாரம் தோப்புவிடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பிரதாபாஸ் கூறும்போது ;-

    முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் திட்டத்தின் கீழ் தரிசு தொகுப்பு குழு 22 ஏக்கர் தரிசு உள்ளது.

    நீர் அளவாரம் இல்லாததால் நீண்ட நாள் தரிசாக இருந்த நிலையில் தரிசு தொகுப்பு குழு அரசு திட்டத்திற்கு தேர்வு செய்த அரசு ஒதுக்கி ஆழ்துளை அமைப்பதற்கு விவசாயி 1 சென்ட் நிலம் வேளாண்மை உதவி இயக்குனருக்கு தான பத்திரம் எழுதி கொடுத்ததினால் தோப்பு விடுதி தரிசுதொகுப்பு குழுவுக்கு அலுவலர் கிணறு 620 அடி அமைத்து கொடுக்கப்பட்டது.

    இதனால் நீண்ட நாள் பரிசாக கிடந்த இடத்தை விவசாய நிலமாக கொண்டு வர முடியும்.

    இந்த திட்டத்தை அறிமுகம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    இதேப்போல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பலர் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ×