search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "overflowing"

    • தமிழக பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி 13 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
    • இந்த நீர் புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க சென்று கொண்டிருக்கிறது.

    புதுச்சேரி:

    தமிழக பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 21-ந் தேதி 13 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் தென் பண்ணையாற்றில் மேலும் அதிகபட்ச தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இருபுறமும் கரைபுரண்டு ஓடியதால் பல இடங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையிலேயே உள்ளது.

    இந்த நீர் புதுச்சேரி எல்லைப் பகுதியான குருவிநத்தம் பகுதியில் 2 மீட்டர் உயரத்திற்கு சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க சென்று கொண்டிருக்கிறது. புதுவை மாநிலத்தில் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரி அதிகபட்ச கொள்ளளவை எட்டியதால் சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மதகுகளை மூடி உள்ளனர். தற்பொழுது பாகூர் ஏரியில் நிரப்பப்பட்ட நீர் தொடர்ந்து ஜனவரி மாதம் வரை அதிகபட்ச கொள்ளளவில் தேக்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    தென்பெண்ணை ஆற்றில் வரும் வெள்ள நீரால் பாகூர் சித்தேரி, மணப்பட்டு ஏரிகளை நிரம்பி வழிகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையில் கிருமாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு, உச்சிமேடு, குருவிநத்தம், கடுவனூர் உள்ளிட்ட 11ஏரிகள் நிரம்பி உள்ளது.

    • சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் வடிகால் மற்றும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது.
    • தரைப்பாலம் மூழ்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் தினமும் பெய்து வரும் மழையால் அங்குள்ள சேலம்-கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் வடிகால் மற்றும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

    இந்த சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீருடன், மழைநீர் வெளியேறி வருவதால் துர்நாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நீருடன் அருகே உள்ள விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீர் , சர்வீஸ் சாலையை தாண்டி புறவழிச்சாலையில் கரைபுரண்டு ஓடுகிறது. வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த விவசாய நிலத்தின் அருகே, மழைநீரில் மூழ்கும் நிலையில் உள்ள தரை பாலத்தின் வழியாக சென்று வந்து கொண்டுள்ளனர்.

    தரைப்பாலம் மூழ்கினால் பள்ளி மாணவர்கள் செல்ல வழியில்லாத நிலை ஏற்படும். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர், இட உரிமையாளர்கள் பரிசீலித்து விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். செடி, கொடிகள், பிளாஸ்டிக் பொருட்கள், துணி மணிகள் உள்ளிட்டவைகளால் அடைபட்ட வடிகால் அடைப்பை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
    • பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம், தலமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே நேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார வனப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. திடீரென மதியம் 3 மணி அளவில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. மேலும் திம்பம், காளி திம்பம், தலமலை, பெஜலட்டி, மாவநத்தம் ஆகிய பகுதியில் தொடர்ந்து இரவு 7 மணி வரை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பலத்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் திம்பம் வனப்பகுதிகளில் புதிய அருவிகள் தோன்றியது. அருவிகளில் இருந்து தண்ணீர் கொட்டி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி குய்யனூர் தடுப்பணைக்கு சென்றது. இதனால் தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றது. தொடர்ந்து அருகே உள்ள ஓடை, குளம், குட்டைகளுக்கும் தண்ணீர் சென்று நிரம்பி வருகிறது.

    அதேப்போல பலத்த மழையால் மலைப்பாதையில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ×