search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் தவறி விழுந்து"

    • குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
    • கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஈரோடு:

    ஈரோடு அவல்பூந்துறை, கண்டிக்காட்டு வலசு இந்திரா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    வெள்ளிங்கிரி சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வைத்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து சிவரஞ்சனி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளியங்கிரி அவ்வப்போது மனைவி பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்று வருவார்.

    வெள்ளியங்கிரி அவ்வப்போது யாரிடம் சொல்லாமல் எங்கேயாவது கோவிலுக்கு சென்று விடுவார். அவர் கோவி லுக்கு செல்லும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று குடிபோதையில் மாமியார் வீட்டுக்கு வந்த வெள்ளியங்கிரி சாப்பிட்டு உள்ளார். அப்போது சாப்பாடு சரியில்லை என்று கூறி மனைவியை சத்தம் போட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    மாலை அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி சாயுபுதோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அதனை அவரது மாமியாரும் பார்த்து உள்ளார்.

    அதன் பின்னர் வெள்ளியங்கிரி எங்கையோ சென்று விட்டார். வழக்கம்போல் சிவரஞ்சனி கணவருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஒருவேளை கோவிலுக்கு சென்று இருப்பார் என்று கருதிய சிவரஞ்சனி பின்னர் கணவருக்கு போன் செய்யவில்லை.

    இந்நிலையில் சிங்கம்பேட்டை-எரன்கடு ஐயம் தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அம்மாபேட்டை போலீசார் மற்றும் வெள்ளிங்கிரி உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசார ணையில் வெள்ளிங்கிரி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    அரச்சலூர்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் விஜய் (வயது 23).

    இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த நவீன (21) என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு வயதில் ஜாஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமண த்துக்குப் பிறகு இவர்கள் ஈரோடு மாவட்டம் அட்ட வணை அனுமன் பள்ளி அருகே உள்ள முருகந்தொழு வுப்பகுதியில் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மேச்சேரிக்கு குடும்ப த்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தின மனைவி மற்றும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு விஜய் முருகந்தொழுவு வந்தார்.

    தொடர்ந்து அவர் அரச்சலூர் அருகே உள்ள பழைய பாளையம் பகுதியில் உள்ள பொது கிணற்றுக்கு அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதை கண்ட அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள கிணற்றுக்குள் இறங்கி விஜயை மீட்டு அரசு ஆ!ஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள போதபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்டார். சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது நண்பர் சதீசுடன் சேர்ந்து அவரது தோட்டத்தில் சுரேஷ் மது அருந்தியுள்ளார். போதையில் சதீஷ் தூங்கி விட்டார். இரவு 8 மணியளவில் சதீஷ் தூங்கி எழுந்து பார்த்தபோது சுரேசை காணவில்லை.

    பின்னர் தோட்டம் முழுவதும் தேடி பார்த்தும் சுரேஷ் கிடைக்கவில்லை. ஒருவேளை சுரேஷ் கிணற்றில் தவறி விழுந்திரு க்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் நம்பியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி தேடியதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×