search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து ஜே.சி.பி. டிரைவர் பலி
    X

    கிணற்றில் தவறி விழுந்து ஜே.சி.பி. டிரைவர் பலி

    • குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.
    • கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஈரோடு:

    ஈரோடு அவல்பூந்துறை, கண்டிக்காட்டு வலசு இந்திரா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (26). இவரது மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    வெள்ளிங்கிரி சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வைத்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து சிவரஞ்சனி கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளியங்கிரி அவ்வப்போது மனைவி பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்று வருவார்.

    வெள்ளியங்கிரி அவ்வப்போது யாரிடம் சொல்லாமல் எங்கேயாவது கோவிலுக்கு சென்று விடுவார். அவர் கோவி லுக்கு செல்லும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று குடிபோதையில் மாமியார் வீட்டுக்கு வந்த வெள்ளியங்கிரி சாப்பிட்டு உள்ளார். அப்போது சாப்பாடு சரியில்லை என்று கூறி மனைவியை சத்தம் போட்டு விட்டு வெளியே சென்று விட்டார்.

    மாலை அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி சாயுபுதோட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அதனை அவரது மாமியாரும் பார்த்து உள்ளார்.

    அதன் பின்னர் வெள்ளியங்கிரி எங்கையோ சென்று விட்டார். வழக்கம்போல் சிவரஞ்சனி கணவருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஒருவேளை கோவிலுக்கு சென்று இருப்பார் என்று கருதிய சிவரஞ்சனி பின்னர் கணவருக்கு போன் செய்யவில்லை.

    இந்நிலையில் சிங்கம்பேட்டை-எரன்கடு ஐயம் தோட்டம் பகுதியில் உள்ள கிணற்றில் வெள்ளிங்கிரி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அம்மாபேட்டை போலீசார் மற்றும் வெள்ளிங்கிரி உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசார ணையில் வெள்ளிங்கிரி குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×