search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலிபணியிடம்"

    • இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
    • காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு ( சி.ஐ.டி.யூ) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் கோவிந்தராஜு, மண்டல செயலாளர் ராஜாராமன், வட்ட செயலாளர் காணிக்கராஜ், பொருளாளர் சங்கர், துணைத் தலைவர் ஆரோக்கிய சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஜெயபால் வாழ்த்துரை வழங்கினார்.இந்தப் போராட்டத்தில் இ.டெண்டர் முறையை ரத்து செய்து ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் கோட்டத் தலைவர்கள் ஆறுமுகம் , கலைச்செல்வன், கோட்ட செயலாளர்கள் சேக் அகமது உஸ்மான் உசேன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட செயலாளர்கள் அறிவழகன் நன்றி கூறினார்.

    • இரவு நேர சிறப்பு காவலர் பணி மேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் இரவு நேர சிறப்பு காவலர் பணிமேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதனை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்ப டவுள்ளது. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.8,300- வழங்கப்படுகிறது.

    இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பி க்கலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமா கவோ விண்ணப்பி க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலை பேசி மூல மோ (04366 -290080) தொடர்பு கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூற ப்பட்டு ள்ளது.

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஷகிலா பானு தலைமை தாங்கினார்.

    அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை கள் வலியுறுத்தி செம்பனார்கோ வில் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வள்ளியம்மாள், செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×