search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பனார்கோயிலில், அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    செம்பனார்கோயிலில், அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செம்பனார்கோயிலில், அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.
    • அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஷகிலா பானு தலைமை தாங்கினார்.

    அப்போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை கள் வலியுறுத்தி செம்பனார்கோ வில் ஒன்றியத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அங்க ன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதிய சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் வள்ளியம்மாள், செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×