கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இரவு நேர சிறப்பு காவலர் பணி மேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.
கலெக்டர் சாருஸ்ரீ.
கலெக்டர் சாருஸ்ரீ.
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் இரவு நேர சிறப்பு காவலர் பணிமேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதனை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்ப டவுள்ளது. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.8,300- வழங்கப்படுகிறது.

இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பி க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமா கவோ விண்ணப்பி க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலை பேசி மூல மோ (04366 -290080) தொடர்பு கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூற ப்பட்டு ள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com