search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் நிறுவனம்"

    24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
    புதுடெல்லி:

    ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.



    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தனது உத்தரவை அமல்படுத்தாத அந்த நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, ரூ.100 கோடியை 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  #NGT #Volkswagen #Deposit 
    அரியானா மாநிலம் குர்கானில் வேலை பறிபோன ஆத்திரத்தில் மேலதிகாரியை ஊழியரே துப்பாக்கியால் சுட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    குர்கான்:

    அரியானா மாநிலத்தின் குர்கான் நகரில் அமைந்துள்ளது ஜப்பான் நாட்டு கார் தொழிற்சாலை. இங்கு வேலை செய்து வரும் ஊழியர் தயாசந்த். இவர் வேலைக்கு சரிவர வராமலும், வேலையிலும் அலட்சியமாக நடந்து கொண்டதால் இவர் மீது புகார் வந்தது.

    அந்த கார் நிறுவனத்தின் மேலதிகாரியாக எச்.ஆர். எனப்படும் மனித வள மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருப்பவர் தினேஷ் சர்மா. இதையடுத்து, தயாசந்த்தை பணியில் இருந்து நீக்கினார் தினேஷ் சர்மா. இதனால் அவர்மீது ஆத்திரம் கொண்டார்.

    இந்நிலையில், தினேஷ் சர்மா நேற்று காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது கூட்டாளிகள் சிலருடன் தயாசந்த் பைக்கில் பின்தொடந்து வந்தார்.

    ஆளில்லா இடத்தில் காரை தடுத்து நிறுத்திய தயாசந்த் துப்பாக்கியால் தினேஷ் சர்மாவை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் தினேஷ் சர்மாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாசந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×