search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் மாநகராட்சி"

    • தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
    • முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக கண்ணன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு ஆணையர் கண்ணனை கோவை மாவட்டத்தில் உள்ள நகரியல் பயிற்சி மைய இயக்குனராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் தாம்பரம் மாநகராட்சியின் துணை ஆணையராக பணி புரிந்து வந்த செந்தில்முருகனை காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.

    இதன் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 3-வது ஆணையராக செந்தில் முருகன் மாநராட்சி ஆணையரக அலுவலகத்தில் நேற்று முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி பொறுப்பேற்றார். முன்னதாக பொறியாளர் கணேசன், சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
    • காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    எனவே மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் குப்பைகளை தீ வைத்து எரிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகளை பொதுமக்கள் யாரும் தீவைத்து எரிக்காமல் இருக்கவும், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர பகுதிகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடத்தில் அளித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    1-வது வார்டு பஞ்சுப்பேட்டை, 3-வது வார்டு ஏகம்பரநாதர் சன்னதி தெரு, 5-வது வார்டு பூக்கடை சத்திரம், 17-வது வார்டு, பி.எஸ்.கே. தெரு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் 19-வது வார்டு ரெயில்வே ரோடு, 24-வது வார்டு 3-ம் கால் திருவிழா மண்டபம் தெரு, 25 வது வார்டு அண்ணா தெரு, 33-வது வார்டு விளக்கொளி கோயில் தெரு, 36-வது வார்டு காவலான் தெரு, 48 வது வார்டு ஓரிக்கை ஜங்சன், 49-வது வார்டு சதாவரம் மெயின் ரோடு, 14-வது வார்டு ஆவாக்குட்டை, 11-வது வார்டு திருவேங்கடம் தெரு, 44- வார்டு இரட்டை கால்வாய், 39-வது வார்டு என்.ஜி.ஓ. நகர் ஆகிய 16 இடங்களில் அளித்து சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்த்து போகி பண்டிகையை புகையில்லா போகி பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×