search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் பன்வாரிலால்"

    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக கவர்னர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovernor #AnnaUniversity
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.

    பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருப்பது, உயர் கல்வியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் கிடைத்த இடமாகும்.

    இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernor #AnnaUniversity
     
    சட்ட கல்லூரியில் ராகிங் தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார். #StudentRagging
    சென்னை:

    சென்னை அடையாறில் டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இதன் துணைவேந்தராக தம்மா சூரியநாராயண சாஸ்திரி பதவி வகித்து வருகிறார்.

    சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சட்டக் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகள் நடைபெற்று வருவது தமிழக கவர்னர் பன்வாரிலால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சமீபத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராகிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இதில் கே.கே.பிரசாந்த் என்ற மாணவர் தாக்கப்பட்டதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விலகியது.

    இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதன் பேரில் இதுபற்றி விசாரிக்க ஆர்.சிங்காரவேலன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாளை (சனிக்கிழமை) கூடி விசாரணை நடத்துகிறது.

    இதற்கிடையே இந்த குழுவில் இடம் பெற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் ராகிங் தொடர்பான புகார்களை விசாரிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாணவர் பிரசாந்த் தாக்கப்பட்டது தொடர்பாக வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டு 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 2 மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.



    இதே போல் மற்றொரு 2-ம் ஆண்டு மாணவர் கே. தனுஷ் என்பவரும் ராகிங் கொடுமைக்கு ஆளானார். இவரையும் இவரது நண்பரையும் மூத்த மாணவர்கள் சிலர் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வரவழைத்து பீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி குடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதுபற்றியும் வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக நடந்த ஒரு சம்பவத்தில் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவரை பரீட்சை எழுத விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.

    ராகிங் கொடுமை தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார்.

    இந்த நிலையில் நாளை ராகிங் தொடர்பான விசாரணை குழு கூட்டம் நடைபெறுகிறது. #StudentRagging
    கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterPandiarajan

    சென்னை:

    கவிஞர் கண்ணதாசன் 92-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது தமிழக அரசின் பணிகள், திட்டங்களை வலுப்படுத்துவது மாதிரிதான் உள்ளது.

    எந்த இடத்திலும் நாங்கள் தவறு செய்ததாக கவர்னர் சொல்லவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிகாரிகள் அளவில் அவர் ஆய்வு செய்வது எங்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் தி.மு.க.வினர் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் தேவையில்லாதது. சட்டரீதியாகவும் சரி கிடையாது. தார்மீக ரீதியாகவும் சரி கிடையாது. கவர்னர் ராஜ்பவனில் இருந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு.

    அரசியல் சாசன சட்டப்படி அவருக்கு உள்ள கடமையை அவர் செய்கிறார். தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல கவர்னர் செயல்படுகிறார்.

    முன்னாள் கவர்னர் சென்னாரெட்டியை மாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு காரணம் வேறு. அந்த உதாரணம் இந்த கவர்னருக்கு பொருந்தாது.

    சென்னாரெட்டி அரசின் திட்டங்களை எதிர்த்தார். இதனால் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போதைய கவர்னர் நெகட்டிவ் ஆக எதுவும் சொல்லவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி தான் வருகிறார்.

    பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரத்துக்கும், அவர் சொல்வதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.

    தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினாலும் முடிந்தவரை வன்முறைகள் இல்லாத நிலைவரை அனுமதிக்கிறோம். ஒரு வருடத்தில் 27 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக போராட்டம் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது.

    எம்.ஜி.ஆர். காலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரும்புகரம் கொண்டு ஒடுக்கினார். அந்த நாளில் இருந்து நக்சலைட்டுகள் தலைதூக்க விடாமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்,

    நெல்லூரில் இருந்து நேபாளம் வரை நக்சலைட்டுகள் பரவி இருந்த நிலையிலும் தமிழகத்தில் அவர்களால் தலைவைத்து படுக்க முடியவில்லை. இப்போது கூட முளையிலேயே கிள்ளி எறிந்ததால் தமிழகம் அமைதியாக திகழ்கிறது.

    பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. இது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உண்மைக்கு மாறாக அவர் கூறி வருகிறார்.

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட நன்மைகள்தான் அதிகம். இதில் எவ்வளவு நிலங்கள் சாலைக்காக எடுக்கப்பட உள்ளது போன்ற விபரங்களை ஏற்கனவே முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan

    ×