search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழுத்தை அறுத்து"

    • ரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
    • இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அயிலம்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார்(35). திருமணம் ஆனவர். ஒரு குழந்தை உள்ளது. பிரவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.

    பிரவீன்குமார் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மரப்பாலத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இதற்காக ஓட்டல் அருகே மாடி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு பிரவீன்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றவர் மீண்டும் இன்று காலை வேலைக்கு வர வில்லை.

    இதையடுத்து ஓட்டலில் அவருடன் வேலை பார்க்கும் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    கழுத்தை அறுத்து தற்கொலை

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிரவீன்குமார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பிரவீன்கு மார் தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொ லை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து பிரவீன்கு மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்குமார் தற்கொலை க்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • சந்திரசேகரன் வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூசாரியூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 33). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் சந்திர சேகரன் தங்கி இருந்த வீட்டில் கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சந்திரசேகரன் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 

    • சுரேஷ் கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்து கொண்டார்.
    • மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    கொடுமுடி அடுத்த வடக்கு புதுப்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37).

    இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு இன்னும் திரு மணமாகவில்லை. தொடர்ந்து அவரும், அவரது பெற்றோரும் பல ஆண்டுகளாக திருமண த்துக்கு பெண் பார்த்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் அவருக்கு பெண் பார்த்த போது திருமணம் செய்ய பெண் அமையவில்லை. மேலும் ஜாதகமும் பொருந்த வில்லை. இதனால் அவர் மன சேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் சின்னியம்பாளை யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×