search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்தகுதி"

    • சி.ஜி.எல் பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு கள் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மத்திய அரசு தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டப்படி ப்பு தரத்திற்கான (சி.ஜி.எல்) பணியிடங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தேர்விற்கான வயது வரம்பு 18 வயது முதல் 32 வரை ஆகும். பணியிடத்திற்கு ஏற்றவாறு வயதுவரம்பு மாறும்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான விழிப்புணர் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை ) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் பாடக் குறிப்புகள் உள்ளிட்ட விளக்க வகுப்பு கள் நடக்கிறது.

    இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்- அப் எண்ணிற்கு அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி பற்றி புகார் கூறிவரும் வேளையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் பா.ஜனதா வேட்பாளர்கள் கல்வித் தகுதி பற்றியதாக இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியின் கல்விச் சான்றுகளை தணிக்கை செய்தால் கிடைக்க வேண்டிய பதில்கள் ஏராளமாக இருப்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். இவ்வளவு ஏன், அவர் முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? இந்தியாவின் எதிர்க்கட்சி பிரசாரம் செய்வதற்கான காரணத்தை வாடகைக்கு தேடும் நிலையில் உள்ளது.



    அங்கு ஒரு தலைவர் இல்லை, ஒரு நல்லுறவு இல்லை, குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லை, உண்மையான பிரச்சினைகள் இல்லை. ஆச்சரியமளிக்கும் வகையில் பிரசாரத்தை கேட்பவர்களும் இல்லை. ரபேல் ஒப்பந்த பிரசாரம் - பொய், தொழில் அதிபர்களின் கடன் தள்ளுபடி - பொய், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி - மிகப்பெரிய பொய். ஒரு மாதம் பிரசாரம் செய்கிறார்கள், எதை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #RahulGandhi #ArunJaitley
    ×