search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா சட்டசபை"

    • கர்நாடகா சட்டசபையில் சித்தராமையான நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டார்
    • பலத்த பாதுகாப்பை மீறி ஒருவர் எம்.எல்.ஏ. இருக்கையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது

    கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 70 வயது முதியவர் ஒய்யாரமாக சென்று, நேராக எம்.எம்.ஏ. இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார்.

    அவர் அமர்ந்தது மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. கரியம்மாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையாகும். அருகில் இருந்த மற்றொரு மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ., இந்த முகத்தை பார்த்த மாதிரி இல்லையே? என சந்தேகப்பட்டு சட்டசபை செயலரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டு சட்டசபையில் இருந்து அந்த முதியவர் வெளியேற்றப்பட்டார். சபாநாயகரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவரிடம் விசாரித்தபோது, அவர் பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்ததாகவும், எம்.எல்.ஏ. இல்லை எனவும் தெரியவந்தது.

    எம்.எல்.ஏ.-விற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் பாதுகாப்பை மீறி சட்டசபைக்குள் நுழைந்து எம்.எல்.ஏ. இருக்கையில் ஒருவர் சென்று அமர்ந்தது, பாதுகாப்பு குறித்து விமர்சனம் எழுப்பப்பட்டுள்ளது.

    கர்நாடக அரசு புதிதாக ஆட்சியமைத்தபின் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டம் இதுவாகும். சித்தராமையா 14-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    • முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்.

    கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவிற்கு இது 14-வது பட்ஜெட் தாக்கல் ஆகும்.

    2023-24 நிதியாண்டில் இது இரண்டாவது பட்ஜெட். கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.

    மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார்.

    மேலும் மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

    • மந்திரிசபையில் 24 இடங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
    • மூத்த தலைவர்கள் மந்திரிசபையில் இடம்பிடிக்க முனைப்பு காட்டுவதாக தகவல்.

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்று உள்ளனர். இவர்களுடன் எட்டு மந்திரிகள் பதவியேற்றனர். எனினும், இவர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    மந்திரிசபையில் மீதம் இருக்கும் 24 இடங்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. மூத்த தலைவர்கள் தேஷ்பாண்டே, எச்.கே. பட்டீல் உள்ளிட்டோர் மந்திரிசபையில் இடம்பிடிக்க முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

     

    கிட்டத்தட்ட 45 எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி கேட்பது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்பது போன்ற காரணங்களால் யார் யாருக்கு மந்திரி பதிவி வழங்குவது என்ற விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட வட்டாரத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் டெல்லி புறப்பட்டு சென்றனர். இருவரும் கட்சி மேலிடத்திடம் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வகையில், விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

    • சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல.
    • சாவர்க்கரின் படத்தை வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும்?

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபையில் பசவண்ணா, வால்மீகி, கனகதாசா, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களை வைக்க, சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து வீர சாவர்க்கரின் படத்தையும் சேர்த்து 6 தலைவர்களின் படங்களை பாஜக அரசு சட்டசபையில் வைத்துள்ளது.

    இந்நிலையில் சாவர்க்கரின் படம் கர்நாடகா சட்டசபையில் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக கூறினார். 


    அதனால்தான் அவர்கள் சாவர்க்கரின் உருவப்படத்தை சட்டசபை அரங்கில் நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக அரசுக்கு எதிராக ஊழல் பிரச்சினைகளை சட்டசபையில் நாங்கள் எழுப்ப போகிறோம் என்பதால் அவர்கள் இந்த புகைப்படத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசாரின் பங்கு மற்றும் தியாகங்கள் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள், ஆனால் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல, இப்போது இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ் என்று குறிப்பிட்டார். 


    அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவர் கூறினார். சாவர்க்கரின் படத்தை சட்டசபையில் வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும் என்பது குறித்து சித்தராமையாவிடம் கேட்குமாறும் அவர் தெரிவித்தார்.

    ×