search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருமாரியம்மன்"

    • ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
    • பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

    திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:

    ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.

    தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.

    தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.

    தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.

    பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.

    பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.

    சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.

    புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.

    நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்

    • கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் காட்சி தருகிறார்கள்.
    • மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

    கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் முருகரும் வெள்ளிக் கவசங்கள் துலங்கக் காட்சி தருகிறார்கள்.

    காவலுக்கு துவார பாலகிகள்.

    அர்த்த மண்டபச் சுற்றுச்சுவரில் கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, சதுர்முகி, சாமூண்டீஸ்வரி.

    முதல் பிராகாரத்தில் லக்ஷ்மி, பாலவிநாயகர், ஏகாம்பரேசுவரர் - காமாட்சி, முருகன் - வள்ளி - தெய்வானை, சரஸ்வதி.

    இரண்டாவது பிராகாரத்தில் உற்சவ நாயகி. அடுத்திருக்கும் சந்நிதியில் வேல்கண்ணி அம்மன்.

    அடுத்து, தமிழில் துதித்த குறுமுனி அகத்தியனுக்கோர் சந்நிதி. அதையடுத்து உற்சவ ஆறுமுகன்.

    வடகிழக்கு மூலையில் வேங்கடாசலபதிக்கென ஒரு சிறுகோவில்.

    மகாலக்ஷ்மி தாயாரும் கருடாழ்வாரும் காட்சி தரும் இந்தக் கோவிலில் உற்சவமூர்த்திகளாக,

    ஸ்ரீனிவாசப்பொருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ராமானுஜர், சக்கரத்தாழ்வார்.

    பின்னும் ராம, லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேயன், ஆண்டாள்.

    அந்தக் கோவிலுக்கு வெளியே அரசமரத்தடியில் வலம்புரி விநாயகர்.

    தென்கிழக்கில் நவக்கிரகங்களுக்கென ஒரு சந்நிதி.

    மூன்றாம் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்திக்கு ஒரு தனிக்கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு ஒரு தனிக் கோவில்.

    கல்வி நல்கும் நீலா சரஸ்வதி எனும் அன்னையை மடியில் தாங்கும் உச்சிஷ்ட கணபதிக்கென ஒரு கோவில்.

    பிரத்தியங்கரா தேவிக்கென பிறிதோர் கோவில். சப்தமாதர்கள், சுப்ரமணியர், பைரவர்.

    மூன்றாம் பிராகாரத்தில் இருக்கும் துர்க்கை வெகு லட்சணம்.

    உக்கிர காளியாக இருந்த கருமாரியின் ஆலயத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்து அன்னையின் உக்கிரம் தணித்திருக்கிறார்.

    உமாபார்வதிக்கான மந்திரங்களை உச்சரித்து சாந்த சொரூபீயாக்கியிருக்கிறார்.

    இன்னும் அன்னை உமையவளுக்கான மந்திரங்களால் உபாசிக்கப்படுகிறாள்.

    • புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
    • புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

    இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது.

    புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

    மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று,

    அன்னையை அடி பணிவோருக்கு அபயம் அளிக்கிறது.

    புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

    அன்னை காட்சி தரும் கர்ப்பக்கிருகத்தில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு, அது ஏற்றப்பட்ட நாளில்

    இருந்து எரிந்து கொண்டே இருக்கிறது.

    நெய் உண்டு எரியும் இந்த விளக்கின் சுடரொளியில், அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

    சிரசு மட்டும் காட்டும் உக்கிர நாரணியின் கண்கள் அல்லவரை அச்சப்படுத்துகின்றன.

    நல்லவருக்கு அபயமளிக்கின்றன.

    சிவை வடிவமான கருமாரி காண்போர் கருத்தைக் கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள்.

    மேல் வலதுகரத்தில் உடுக்கையும் பாம்பும். மேல் இடது கரத்தில் திருசூலம்.

    கீழ் வலது கரத்தில் கத்தி கீழ் இடதுகரத்தில் அமுத கலசம்!

    ஒரு காலத்தில் மண்டையோட்டு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில், இப்போது எலுமிச்சை மாலை.

    உதட்டில் சிறு புன்னகை. கிழக்கு நோக்கும் கருமாரி! கண் மூடி வணங்கி நின்றால் உடலில் சிலிர்ப்பு ஓடுகிறது.

    மனதில் அமைதி நிலவுகிறது.

    • நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.
    • தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.

    அசுரருக்கும் தேவருக்குமிடையே ஆதிகாலந்தொட்டே போர் நடந்து வருகிறது.

    நல்லவர் தேவர். அல்லவர் அசுரர். அல்லவை அழித்து, நல்லவை காக்கும் பொறுப்பு ஆண்டவனுடையது.

    அசுரர்களின் கை ஓங்கியிருந்த காலம் அது. தேவர்கள் தீரா துன்பத்தில் சிக்கிச் சிறுமைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

    அவர்தம் குறைகேட்ட பரமசிவன், அசுரரின் ஆதிக்கம் அகற்றி, தேவரின் இடர் களைய எண்ணம் கொண்டார்.

    'அசுரரின் ஆதிக்கத்தை சக்தியால் மட்டுமே சமாளிக்க இயலும்' என்பதால் பரமசிவன், பார்வதியை நோக்கினார்.

    'உமையே... கருமாரியாகக் காட்சி தந்து, நீ ஆட்சி புரிய வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

    இந்த வெண் நீற்றைப் பெற்று சிவனும் சக்தியுமாக இருந்து ஐந்தொழிலையும் புரிந்தருள்க' என்று கூறி தன் மேனிச் சாம்பலை எடுத்து அவளிடம் நீட்டினார்.

    அன்னை சாம்பலைப் பெற்றாள். சிவனும் சக்தியுமாகத் தானே ஆகிக் காட்சி தந்தாள்.

    தேவர்கள், தங்களுக்கு அபயம் அளிக்கப் புறப்பட்ட சக்தியை நெஞ்சாரப் போற்றித் துதித்தனர்.

    அசுரரை அடக்க, அன்னை சக்தி கருநீல நிறத்தில் பயங்கரமான உக்கிர உருவம் எடுத்தாள்.

    திரிசூலம் ஒன்றைத் தன்முன் நாட்டினாள். அன்னையின் உக்கிரம் தாங்காமல், அல்லல் விளைவித்த அசுரர்கள் அடங்கி ஒடுங்கினர்.

    உக்கிர சக்தியை மகாவிஷ்ணு சாந்தப்படுத்தி, 'கருமாரி.... உலக மக்கள் உய்வதற்கு உன் கடைக்கண் அருட்பார்வையே போதும்.

    தலை காட்டி, உடல் மறை...' என உள்ளன்போடு உரைத்தார்.

    கருமாரி புன்முறுவலுடன் தலைகாட்டி, தன்னிலை மறைத்தாள்.

    ஞாலத்து மக்கள் நாளும் வந்து வழிபட, எப்போதும் போல் ஓர் அழகிய வடிவமுடனும் எழுந்தருளினாள்.

    மகாவிஷ்ணு சாந்தப்படுத்திய கருமாரி உருவம் நாரணி (நாராயணனின் பெண் வடிவம்) என்றும் கிருஷ்ணமாரி என்றும் அழகிய வடிவம் சிவை என்றும் (சிவனின் பெண் வடிவம்) அறியப்பட்டது.

    காலத்துக்கு அப்பாற்பட்ட அகத்தியமுனிவர் அம்மையை இரட்டை உருவுடன் கூடிய இந்த நிலையில் கண்டு செந்தமிழால் போற்றித் துதித்தார்.

    அம்மை அகத்தியருக்குக் காட்சி தந்தது தை மாதத்தில்.

    பவுர்ணமி தினத்தில் பூச நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமையில், இந்த நாளே அன்னையின் அவதார தினமாகக் கருதப்படுகிறது.

    காட்சியளித்த கருமாரி அகத்தியரிடம் சொன்னாள்.

    'அகத்தியா, நீ வந்து வணங்கி வழிபடவே நான் காத்திருந்தேன். அசுரர் ஆணவம் அடங்கிவிட்டது.

    இனி நானும் பாம்பு உருக்கொண்டு புற்றில் அடங்கியிருக்கப் போகிறேன்.

    மறுபடி கலியுகத்தில் காட்சியளிப்பேன் கலியின் கொடுமையால் வாடும் மக்களுக்கு சாம்பலைக் கொண்டே சாந்தி அளிப்பேன்.

    அப்போது எனக்கு திருக்கோவிலும் தீர்த்தக் குளமும் அமையும்.

    பரிவாரக் கடவுளர்களும் பாங்குடனே அமைவர்.

    அன்னை உரைத்தபடியே அனைத்தும் நடந்தேறின.

    வேலங்காட்டில், வெள்ளை வேல மரத்தின் கீழ் பாம்புருவில் அன்னை, புற்றில் குடி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    அந்த இடத்தில் அவளுக்கோர் ஆலயம் எழுந்தது.

    • கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.
    • பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    கொடுங்கோலன் கம்சன் அநீதி ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

    தன் தங்கை தேவகியை வசுதேவனுக்குக் கட்டிக் கொடுத்தான்.

    தங்கையை அவளது கணவனுடன் அனுப்பிவைக்கும் நேரத்தில் ஆகாயத்திலிருந்து அசரீரி ஒன்று ஒலித்தது.

    'கம்சா, உன் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லும்'

    'தன் தங்கையின் பிள்ளை தன்னைக் கொல்வதா?' என்று ஆத்திரமடைந்து தேவகியையும் வசுதேவனையும் சிறையில் அடைத்தான் கம்சன்.

    அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கொன்று வந்தான்.

    ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டன.

    தேவகியின் எட்டாவது கர்ப்பம்.

    அந்தக் கருவில் உதிக்க இருந்தவன் கண்ணன்.

    அதே சமயம், ஆயர்பாடியில் நந்த கோபனின் மனைவி யசோதையும் கருவுற்றிருந்தாள்.

    அவள் கருவில் குடி கொண்டிருந்தது மாயா எனும் சக்தி.

    தேவகிக்குக் குழந்தை பிறந்தது.

    இறைவனின் எண்ணப்படி தேவகியின் குழந்தை ஆயர்பாடி போய்ச் சேர்ந்தது.

    யசோதையின் குழந்தையான மாயா சக்தி சிறைக்கு இடம் மாறியது.

    அதன் பின்னரே குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்குத் தெரியவந்தது.

    குழந்தையைக் கொல்ல கம்சன் குதூகலத்துடன் வந்து சேர்ந்தான்.

    பிறந்திருப்பது பெண் குழந்தை என அறிந்து திகைத்தான்.

    பிள்ளை அல்லவா பிறக்கப்போகிறது என அசரீரி அறிவித்திருந்தது.

    இருந்தும் கம்சன், 'உன்னை விட்டாலும் தவறு. ஆதலால் எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்' என வானதிர சிரித்து வாளை ஓங்கினான் வெட்ட...

    அவனுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாகச் சிரித்து விண்ணில் தாவியது அந்தக் குழந்தை.

    'அடேய் ஆத்திரக்காரா! கரு மாறி வந்த என் கழுத்தை நெரிக்கப்பார்க்கும் கல்நெஞ்சக் கம்சா!

    உன்னை வதைக்க என் அண்ணன் ஆயர்பாடியிலிருந்து இடையனாக எட்டு வயதில் வருவான்! அதுவரை காத்திரு' என்று சொல்லி மறைந்தது.

    கரு மாறி விட்டதை உணர்ந்த கம்சன் கலக்கத்துடன் 'கருமாறி' என்றான்.

    அக்கணமே ஆகாயம், பூமி அனைத்தும் 'கருமாரி, கருமாரி' என்று அழைக்கத் தொடங்கின.

    இப்படித்தான் கருமாரி உருவானாள்.

    கம்சனின் கண்ணில் இருந்து மறைந்த அவள் கண்ணனிடம் சென்றாள்.

    தானெடுத்த ஒரு பிறவி இவ்வளவு விரைவில் முடிவுக்கு வந்துவிட்டதே என அண்ணனிடம் ஆதங்கப்பட்டாள்.

    'இல்லை, கருமாரி என்ற பெயருடன் நீ அகிலத்தை ஆட்சி செய்யப் போகிறாய்.

    நடக்கப் போவதைப் பொறுத்திருந்து பார்' என கண்ணன் கூறினான்.

    • திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.
    • நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.

    திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.

    இதனால் அந்த பகுதியை வேலக்காடு என்று அழைத்தனர்.

    அந்த வேலங்காட்டில் ஒரு பாம்புப்புற்று இருந்தது

    பாம்பு வடிவில் அந்தப் புற்றில் கருமாரி இருந்து வருகிறாள் என்பது தெரிய வந்தது.

    மெல்ல, மெல்ல கருமாரியின் புகழ் பரவியது.

    பக்தர்கள் கருமாரியை தேடி வந்து குறிகேட்டு பலன் பெற்று சென்றனர்.

    கடந்த நூற்றாண்டில்தான் இந்த அற்புதம் நடந்தது.

    நாளடைவில் வேலங்காடு திருவேற்காடு ஆகியது. கருமாரி அன்னை ஆலயம் எழுந்தது.

    இந்த கருமாரி யார்? நீண்ட நாட்களாக நாக வடிவில் மக்கள் அறியாதபடி இருந்ததற்கு என்ன காரணம்?

    அதற்கு ஒரு புராண கதை உள்ளது.

    அதைப்பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

    • குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
    • திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

    கண்ணிரண்டும் உன்முகமே காணவேண்டும்-அம்மா

    காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்

    பண்ணமைக்கும் நா உனையே பாடவேண்டும்-அம்மா

    எல்லோரும் பக்தியோடு கையெடுத்து உன்னையே கும்பிடவேண்டும்!

    எண்ணமெல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்

    இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும்!

    மண்ணடக்கும் தாயே பெரியபாளையத்தம்மா

    மண்ணளக்கும் தாயே!

    குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா

    மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா

    விருதுநகரிலே முத்துமாரியம்மா

    சிவகாசியிலே பத்ரகாளியம்மா

    வீரபாண்டியிலே கௌமாரியம்மா

    தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா

    இருக்கங்குடியிலே மாரியம்மா

    செந்தூரிலே சந்தன மாரியம்மா

    ஆரல்வாய் மொழியிலே  முப்பந்தலிலே இசக்கிமாரியம்மா

    பெருங்கரையிலே சதுரங்க நாயகியம்மா

    சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா

    திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா

    மணப்பாறையிலே முத்துமாரியம்மா

    திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

    மண்ணளக்கும் தாயே!

    வடநாட்டிலே காசி விசாலாட்சியம்மா

    வங்காளத்திலே காளியம்மா

    விஜயவாடாவிலே கனகதுர்க்கையம்மா

    கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி

    சாரதாம்பிகே-மூகாம்பிகே அம்மா

    தங்க வயலிலே கங்கையம்மா

    கேரளத்திலே சோற்றானிக்கரை பகவதியம்மே

    கொடுங்கல்லூர் பகவதியம்மே

    மண்ணளக்கும் தாயே!

    மலேசிய நாட்டிலே மகாமாரியம்மா

    சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா

    தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா

    குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா

    வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா

    நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா

    வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா

    திருத்துறைப்பூண்டியிலே முள்ளாட்சியம்மா

    எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

    ஆரூரிலே சீதலாதேவி எல்லம்மா

    பட்டுக்கோட்டையிலே நாடியம்மா

    அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா

    திருவப்பூர் மாரியம்மா

    கொன்னையூர் மாரியம்மா

    காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா

    கண்கொடுத்த தெய்வமே நாட்டரசன்

    கோட்டை வாழ் என் கண்ணாத்தா

    மண்ணளக்கும் தாயே!

    படவேட்டிலே ரேணுகாபரமேஸ்வரியம்மா

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா

    வெட்டுவானம் எல்லையம்மா

    செங்கையிலே நாகாத்தம்மா

    மண்ணளக்கும் தாயே!

    மயிலையிலே முண்டக்கண்ணியம்மா

    சென்னையிலே அருள்மிகு தேவி

    கோலவிழி பத்ரகாளியம்மா

    அல்லிக்கேணியிலே எல்லம்மா

    புரசையிலே பாதாளபொன்னியம்மா

    மாம்பலத்திலே முப்பாத்தம்மா

    வட சென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

    சேலத்திலே அன்னதான மாரியம்மா

    ஈரோட்டிலே சின்னமாரி-பெரியமாரியம்மா

    கோவையிலேதண்டுமாரியம்மா-கோணியம்மா

    சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

    மண்ணளக்கும் தாயே!

    • மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள்.
    • சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள்.

    வேயுறு தோனி பங்கன்! விடமுண்ட கண்டன்! மாதொரு பாகனாய் வீற்றிருக்கும் இடம் திருக்கயிலை. ஓங்காரத்தின் உட்பொருள்! பரம்பொருள்!! அம்மையும் அப்பனுமாய் அமர்ந்திருக்கும் இடம் கயிலைமலை. அருளே உருவானவன். பொன்னவிர் மேனியான். கங்கையும் திங்களும் அணிந்தவன்.

    அவர்கள் இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் கொன்று வந்தான்.

    தேவகி எட்டாவது முறையாக கர்ப்பமானாள். அதே சமயத்தில் கோகுலத்தில் நந்தகோபனின் மனையாளும் கர்ப்பமானாள். அவளது கர்ப்பத்தில் உதித்தவள் மாயை என்னும் மகாசக்தி.

    இறைவனின் எண்ணப்படி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவம். வசுதேவர் குழந்தைகளை இடம் மாற்றினார். மாயக்கண்ணன் ஆயர்பாடியில்! மாயாசக்தி கம்சனின் சிறைக்கூடத்தில்.

    வாளெடுத்து வந்தான் கம்சன். பச்சிளம் குழந்தையைக் கொல்லும் மாவீரன். பிறந்தது பெண்ணென்றாலும் கொல்வேன் என்று அந்த மாணிக்கத்தை தூக்கி வீசினான்.

    அடுத்த கணம்...

    அந்தரத்தில் நின்று சிரித்தாள் அந்த மகாசக்தி! அடேய் கொலைப்பாதகா! நான் கருமாறி வந்தவளடா! ஊர் மாறி பேர் மாறி உருமாறி கருமாறி வந்த என்னைக் கொல்லப் போகிறாயா? அது உன்னால் முடியுமா? மும்மூர்த்திகளாலும் முடியாத செயலை, அற்பனே, நீ செய்ய முனைந்தாயா? உன்னை ஒரே நொடியில் பொடிப்பொடியாக்கிவிடுவேன். ஆனால் மண்ணுலக மக்களுக்கு அருள் செய்ய புறப்பட்டவள் நான்! உன்னைக்கொன்று மறுபடியும் ரௌத்காரியாக மாற விரும்பவில்லை.உன்னை கொல்ல வேறொருவன் பிறந்துவிட்டான் என்று கூறி அந்தரத்தில் நின்றவள் மறைந்தாள்.

    மறைந்த மங்கை மறுபடியும் ஒருநாள் சிவபெருமான் முன் தோன்றினாள். கிருஷ்ணமாரியாகத் தோன்றியவளின் உக்கிர சொரூபத்தைக் கண்டு தேவர்களே திகைத்தனர். அசுரரின் கொட்டத்தை அடக்கிட சாம்பலை அள்ளித் தந்தார் சிவபெருமான்.

    சாம்பலால் அகில உலகை காத்து இரட்சித்தாள் தாய்! பாம்புருக்கொண்டு பாங்காக வேற்காட்டில் அமர்ந்தாள். கலியின் வெங்கொடுமை மீண்டும் தலைதூக்கியது. மக்களை காக்க மாதா மீண்டும் தோன்றினாள் மீண்டும் கருமாரியாகக் கோவில் கொண்டாள்.

    • திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.
    • அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்!

    சைவத் திருமுறைகள் பன்னிரண்டு அதில் முதலாம் திருமுறையை அருளியவர் திருஞான சம்பந்தப் பெருமான். பதினொரு இன்சுவைப் பாக்களால் திருவேற்காட்டைப் பாடுகிறார். அதில் உறையும் வேதபுரீசனைப் பாடுகிறார்.

    1. உயரிய பரம்பொருளை நினைப்பவரே தேவர். அவருக்கு நற்கதியை அளிப்பவன் வெள்ளிமலையான். அவன் விரும்பி உறையும் இடம் வேற்காடு.

    அன்னை கருமாரியின் அருள் வரலாறு

    தாய்! ஒரு குழந்தை காணும் முதல் முகம்! அந்த தாய் தான் குழந்தையிடம் அளப்பரிய அன்பு கொண்டவள். எனவே குழந்தைகள் அன்னையைத் தான் முதலில் நாடும். தனக்குத் தேவையானவற்றை அன்னையிடம் கூறி அவள் மூலம் தந்தையிடமிருந்து பெறுவதே குழந்தையின் இயல்பு.

    அதேபோல் ஆண்டவனின் அருளை நாடுவோர் முதலில் அன்னையை நாடுவர். அம்மை மனம் கனிந்தால் அப்பனின் அருள் எளிதில் கிடைக்கும். அந்த அன்னை எண்ணிலா வடிவங்களில், எண்ணிலா பெயர்களில் எண்ணிலாத் திருக்கோவில்களில் காட்சி செலுத்திக் கொண்டிருக்கிறாள்.

    திருவேற்காட்டுத் தலத்தினில் தனிப்பெரும் கருணையோடு, புன்னகை தவழும் முகத்தோடு அவள் வீற்றிருக்கிறாள்.

    உடுக்கை ஏந்திய கரம் ஒன்று

    திரிசூலம் தாங்கிய கரம் மற்றொன்று

    வாள் தாங்கிய வளைக்கரம் இன்னொன்று

    பொற்கிண்ணம் ஏந்திய பூங்கரம் வேறொன்டு

    நாற்கரத்து நாயகி! சிவசக்தியாய் அமர்ந்த நிலையில் ஒரு திருக்கோலம்!

    தலைகாட்டி உடல் மறைந்த நாரணியாய் மற்றொரு கோலம்.

    வேண்டுவோர்க்கு வேண்டுவன அருளும் தேவி! அனைத்து துன்பங்களையும் வேரறுக்கும் அனந்த நாயகி!

    ஆயிரம் கண்ணுடையாள்!

    ஆதிபராசக்தி

    வேற்காட்டுக் கருமாரி

    கண்ணின் கருமணி போன்றவள்

    ஒரே ஒரு முறை தன்னிடம் அடைக்கலம் வந்தோரையும் ஆதரிப்பவள். வளமான வாழ்வளிப்பவள். சகல செல்வங்களும் தரும் தயாபரி. அகிலமதிலே நோயின்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிமை, துணிவு, வாழ்நாள், வெற்றி, தீமை கழித்து நல்லூழ் நாட்டுதல், நுகர்ச்சி ஆகிய பதினாறு பேறும் கண்சிமிட்டும் நேரத்தில் அருள்பவள்.

    பாமரர்களின் பரிபூரண நம்பிக்கை!

    படித்தவர்களின் பரம்பொருள் நாயகி!

    பதவியில் இருப்பவர்க்குப் பரதேவதை!

    செல்வாக்கு உள்ளவர்களுக்கு அஷ்டலட்சுமி!

    கிராம மக்களுக்குக் குலதெய்வம்

    நகர மக்களுக்கு பிரும்மாண்ட நாயகி!

    அனைத்து மக்களுக்கும் அன்புத்தாய்

    அகில உலகுக்கும் ஆதிபராசக்தி!

    ஏழை பணக்காரன் முதல் படித்தவன், பாமரன் ஈராறாக அவள் பதம் காண ஓடிவருவர். அனைவருக்கும் அருளும் அன்பு தெய்வம்! குறை தீர்க்கும் கற்பகவல்லி! நிறை வாழ்வு நல்கும் நித்தில் நாயகி!

    அந்த அன்னையின் வடிவழகு! அதை ஆண்டாண்டு காலமாய் பாடிய பாவலர் கோடானு கோடி!

    மனிதரும், தேவரும், மாயமா முனிவரும் வந்து சென்னி

    குனிதரும் சேவடிக் கோமளேமே! கொன்றை வார்சடைமேல்

    பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

    புனிதரும் நீயுமென் புந்தி என்னாளும் பொருந்துக

    என்று நமது அபிராமிப் பட்டரை போல் பாடிப்பரவியோர் பலபேர்!

    நமது அன்னையை மனிதர்கள் போற்றுவார்களாம். தேவர்கள் ஏத்துவார்களாம். மாயம் செய்யும் மாமுனிவர் பணிவார்களாம். சென்னியைக் குனித்துச் சேவடி தொழுவார்களாம். அந்த கோமளவல்லி அன்னை பராசக்தியை! கொன்றைப்பூவை வரிச்சடைகளில் சூடியவர் மனேஸ்வரன். பனிபொருந்திய குளிர்தரும் நிலவை அந்த வார்சடைகளில் பொருத்தி வைத்தவர். அதுமட்டுமா? பாம்பை மலராகச் சூடியவர். பகீரதியை தலைமேல் சுமந்தவர். அந்த தயாநிதி உடனுறை தாயாகிய அவளை என்னாளும் என் நினைவில் பொருந்துகவே என்று வேண்டி உருகுவோர் எண்ணற்ற பேர்.

    அன்னை கருமாரி கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்! மஞ்சளால் மகிமை புரிபவள்! எலுமிச்சம் பழத்தில் அதிசயம் காட்டுபவள்! வேப்பிலை தன்னிலே வெப்புநோய் தணிப்பவளே! சாம்பலிலே உயிர்காப்பவள்!

    எண்ணும் எழுத்தும் இருகரமாய்க் கொண்டவள்! பண்ணை பாடும் போது பூரிப்பவள்! பரதத்தை ஆடும்போது புன்னகைப்பவள்! பைந்தமிழ் கேட்டு இன்புறுபவள்! நண்ணும்போது நயந்து அருள்பவள்! விண்ணும் மண்ணும் வாழ்த்திடும் வித்தகி! திருவேற்காட்டு வேற்கண்ணி!

    இதைத்தான் அருட்கவி கருமாரிதாசர்

    எண்ணும் எழுத்தும் இருக்கையாய்க் கொண்டிடும் ஏந்திழையே

    பண்ணும் பரதமும் பைந்தமிழ்ப் பாடலும் பாடிடவே

    நண்ணும் பொழுதில் நயந்தருள் செய்கரு மாரியளே

    விண்ணும் உலகமும் வாழ்ந்திடும் வித்தகி வேற்கண்ணியே

    என்ற பாடி மகிழ்கிறார்.

    அந்த வேற்கண்ணியை-வேற்காட்டு மாரியை முழுதும் அறிந்தவள் யாருளர்?

    அன்னவளுக்கு வரலாறு உண்டோ?

    புராணம் இருக்கிறதோ?

    சில மதியீனர்கள் சொல்வார்கள்- மாரிக்கு ஏது புராணம்? குறி சொல்லும் குறத்திதானே அவள்? எல்லை காக்கும் காளி தானே அவள்? ஊரைக் காக்கும் படாரிதானே அவள்? என்று!

    அறியாமையால் கேட்கப்படும் கேள்வி! வேதமந்திரங்களே அவள் பெயரை முழங்குகின்றன. ஸ்ரீகிருஷ்ணமாரி என்ற அட்சரங்களால் வழங்குகின்றன.

    கருணையை மாரிபோல் பொழிபவள்

    கருமாரி என்னும் திருநாமம் கொண்டவள்

    நாற்கரம் தாங்கிய நாயகி! நற்கதியளிக்கும் நாரணி! ஐந்து பூதங்களுக்கு அப்பாற்பட்டவள்! பஞ்சாட்சரி! ஆறுமுகனுக்கு வேலைத் தந்த அன்னை பரமேஸ்வரி!

    யோகம், ஞானம், வேதங்களுக்கு எட்டாதவள்! ஏங்குவோர்க்கு ஏக்கம் தீர்க்கும் அருமருந்து!

    வேதங்கள் அறிய முடியாத வித்தகி! வேப்பிலையை விரும்பிச் சூடியவள்! உடுக்கையலி கேட்டு ஓடிவருபவள்! கேட்க வரம் தந்த நம்மைக் காத்து இரட்சிப்பவள்!

    அந்த அன்னையின் வரலாற்றை அன்பு மனத்தோடு படியுங்கள்! உங்கள் கலி நீங்கி வளம் ஓங்கும்.

    கருமாரி பெயர் காரணம்

    மாரி என்றால் மழை.

    மாரியும் உண்டு ஈங்கு உலகு புரப்பதுவே என்று குறிஞ்சிக் கபிலர் பாடுவார்.

    கருமாரி என்றால் கருமையான மேகம் எனப்பொருள் கொள்ளலாம்.

    உயிர்கள் வாடுவதைக் கண்டு கருமாரி பொழியும். இது விண்மாரி! அதேபோல் அடியவர் வாட்டத்தை கண்டு அன்னை அருள்மாரி பொழிவாள்! இது மண் மாரி! மண்ணுலகைக் காக்கும் மகாமாரி!

    அன்னை ஆயிரங் கண்ணுடையாள்! கோடி கோடி வடிவங்களில் தோன்றுபவள்! அவ்வடிங்களில் ஒன்பது வடிவங்கள் சிறப்புடையவை! அவ்வடிவங்களில் ஒன்று குளிர் மாரி வடிவம். அவள் சன்னதியின் முதல் படியில் கால் வைக்கும் போதே மனம் குளிரும். மதிகுளிரும். பிறந்த வீட்டில் நுழையும் பெண்ணைப் போல தாய் வீட்டுக் கருணை நெஞ்சில் நிறையும்.

    துர்க்கை, மகாகாளி, மகாலட்சுமி முதலான அன்னையின் அம்சம் தான் கருமாரி! ஆதிபராசக்தி, மகிஷா சூரமர்த்தினி ஆகிய சொருபங்களின் மூலம் தான் கருமாரி!

    • ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது.
    • முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

    புராண இதிகாசக் காலங்களில் தத்தாத்திரேயர் பரசுராமர், அகத்தியர், துர்வாசர், திருமூலர் ஆகிய ஞானிமுனிவர்கள் அன்னையை வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

    அன்னை வழிபாட்டின் வகைப்பாடு

    அன்னையை வீரத்தாயாகப் போற்றி மறக்கருணை நெறியில் வழிபடுவது வடவர் மரபு. அவளை அழகும், அருளும் கொண்டவளாக அறக்கருணை நெறியில் வழிப்படுவது தென்னவர் மரபு.

    இந்த தென்னாட்டு முறைக்கு ஸ்ரீ வித்யை என்று பெயர். இந்த ஸ்ரீவித்யைக்கு மூன்று கோணங்கள் உள்ளன. அவை 1. மந்திரம், 2. தந்திரம், 3. எந்திரம். ஸ்ரீவித்யையில் தேர்ச்சி பெற்றோர் உள்ளத்தால் சாக்தராகவும், நோக்கத்தால் சைவராகவும், அனுட்டானத்தால் வைணவராகவும் விளங்குவர்.

    தென்னிந்தியாவில் அன்னைஅருள்பாலிக்கும் அருள் தலங்களில் அளப்பரிய பெருமை மிக்க தலம். கருணை ஊற்றெடுக்கும் வேற்காட்டுத் தலம். அத்தலத்தின் வரலாற்றையும் பெருமையையும் அறிவதும், அத்தலத்தை நினைப்பதும், அங்கு சென்று அன்னையைத் தரிசிப்பதும் நம்மை உயர்விக்கும் உய்விக்கும்.

    திருவேற்காட்டுத் தலத்தின் வரலாறு

    மண்ணளக்கும் தாய் திருவேற்காட்டில் மகிமையுடன் வீற்றிருக்கிறாள். திருவேற்காடு... புண்ணிய பூமி.... புனிதத்தலம்.... கருமாரியம்மனின் கருணை நிலையம். இது சென்னைக்கு வடமேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.

    அந்த காலத்தில் வெள்வேல மரங்கள் இங்கு அதிகம். எனவே வேற்காடு எனப்பெயர் பூண்டது. நான்மறைகளே வெள்வேல மரங்களாகி நின்ற வரலாறு இதோ!

    வெள்வேல மரங்களின் வரலாறு

    பிரளயம்... அது யுகமுடிவில் வருவது... வெள்ளம் பெருகி உலகை மூழ்க வைப்பது உலகின் முடிவு. அது போன்ற ஒரு முடிவும் ஒரு முறை வந்தது. வெள்ளத்தால் உலகம் முடிவுற்றது. முடிவுக்குப் பின் மீண்டும் தொடக்கமல்லவா? சிவபெருமான் மீண்டும் உலகைப் படைக்க எண்ணினார். வெள்ளம் வற்றியது.

    பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார். அவற்றின் அடியில் லிங்கம் தோன்றியது. லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள். அன்னையின் அருளால் மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் அகிலாண்ட இயக்கம் ஆரம்பமானது.

    வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம் திருவேற்காடு. தேவர்கள் தோன்றிய அவ்விடத்தின் ஒரு பகுதி தேவர் கண்ட மடு என்று அழைக்கப்பட்டது. வேற்காட்டின் வரலாறு இதுதான். இந்த வேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

    பாலி நதியின் வரலாறு

    அவுணர்கனை அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். அந்த அன்பு தெய்வத்திற்கு பாலாபிஷேகம். காமதேனுவின் மகள் நந்தினிப் பசு. அந்த நந்தினியின் பாலில் கந்தக் கடவுளுக்கு அபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களால் நடத்தப்பட்ட அபிஷேகம்.

    பால் ஆறாகப் பெருகிறது. பெருகிப் பெருகி மண்ணில் பாய்ந்தது. பொங்கி வழிந்து புறப்பட்டது. அதுதான் பாலி ஆறு என்று பெயரும் பெற்றது. அந்த பாலி ஆற்றின் கரையில் அமைந்த தலமே திருவேற்காடு.

    விஷங்கள் தீண்டாத வேற்காட்டின் வரலாறு

    ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது. கார்மேக வண்ணன் கடுங்கோபம் கொண்டான், கடவுளுக்கும் கோபம்... சினத்தீ சிறுமையில் தள்ளும் அதுவும் யார் மேல் கோபம்? சிவத் தொண்டன் மீதா?

    தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதாயிற்றே!

    நீலமேக வண்ணன் ததீசியின் மேல் போர் தொடுத்தான். பல கணைகளை வீசினான். ததீசியை சிவபக்தி காத்தது. கணைகள் வீணாயின. இறுதியில் சக்கரத்தை எடுத்தான் தாமோதரன். ஏவினான் முனிவன் மேல்... சுதர்சனம் ஒளியைக் கக்கிக் கொண்டு ஓடியது. ததீசி முனிவன்மேல் மோதியது. ஆயினும் பயனென்ன? சுதர்சனம் வலிமை இழந்தது. கூர்மங்கி சுருண்டு விழுந்தது.

    தாமரைக் கண்ணன் மனம் தளர்ந்தான். சுதர்சனமின்றிச் சோர்வுற்றான். ஈசனை எண்ணிப் பூசிக்க முனைந்தான். அவன் பூசித்த அந்த இடம் திருவேற்காடு.

    தினந்தோறும் ஆயிரம் மலர்களை எண்ணி வைத்து ஈசனை பூசிக்க எண்ணம் கொண்டான். அதன்படி ஆயிரம் தாமரைப்பூக்கள் அன்றாடம் ஈசனின் திருவடிகளை ஆராதித்தன.

    ஒரு நாள் இறைவன் அந்தத் திருமாலைச் சோதித்தான். சிவ சோதனைக்குத் திருமால் மட்டும் விதி விலக்கா என்ன? ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. பூசை பூரணத்துவம் அடையாது நின்றது.

    உடனே உணர்ச்சி பெருக்குடன் ஒரு காரியம் செய்தான். சியாமள வண்ணன். தனது ஒரு கண்ணைப் பெயர்த்தான். உதிரம் கொட்டக் கொட்ட ஆண்டவனின் பரதத்தில் சமர்ப்பித்தான்.

    இறைவன் மாலவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தான். இழந்த திருச்சக்கரத்தை மீண்டும் வழங்கினான். கண்ணை அர்ப்பணித்த கார்முகில் வண்ணனுக்குக் கண்ணன் என்ற பெயரும் வழங்கினான். இந்த தியாக வரலாற்றை அருகிருந்து கண்ணுற்றான் ஆதிசேடன். இந்த மண் புனிதமானது. எனது தலைவனின் ரத்தம் சிந்திய இடம் இது. எனவே இந்த இடத்தில் எங்கள் பாம்பு இனத்தால் யாரும் இரத்தம் சிந்தக்கூடாது என சங்கல்பம் செய்தான்.

    ஆகையால் தான் இன்று வரை இங்கே எந்த உயிரையும் அரவம் தீண்டியதாக வரலாறு இல்லை.

    ஆயிரம் மலர்கள் வைத்துப்பூசித்த இடம் இன்றும் உள்ளது. அது திருவேற்காட்டின் பகுதி... கண்ணபாளையம்... அரவங்கள் விடம்தீண்டாத வரலாறு இதுதான்.

    அகத்தியருக்குக் காட்சி தந்த அருள் வரலாறு

    ஒரு முறை அம்மைக்கும், அப்பனுக்கும் திருமணம். குழந்தைகள் நடத்தும் கோலாகலத் திருமணம். இறைவனின் இனிய லீலைகளில் ஒன்று. தேவர்கள், யக்ஷர்கள், முனிவர்கள், கந்தர்வர், கின்னார், கிம்புருடர் என ஏராளமானோர் திரண்டனர்.

    கைலாயம் கலங்கியது. தெய்வசக்தி ஒரே இடத்தில் திரண்டதால் பூதேவி ஒரு பக்கமாகத் தாழ்ந்தாள்.

    அனைவருக்குமே அம்மையப்பனின் திருமணத்தைக் காண ஆவல். இந்த நிலையில் ஒரு பக்கமாகத் தாழ்ந்தது உலகம். அனைவரும் அஞ்சினர். ஆண்டவனிடம் முறையிட்டனர்.

    அஞ்சாதீர்கள் குழந்தைகளே என்று அபயக்கரம் காட்டினான் எம்பெருமான்.

    ஒரு தட்டு சாய்ந்தால் இன்னொரு தட்டில் எடை கூட்டுகிறோம். அதுபோல ஒரு பக்கம் சாய்ந்த புவியை இன்னொரு பக்கம் எடையேற்றிக் கூட்டுவோம்.

    வடக்கே தாழாதிருக்க தெற்கே எடையை ஏற்றுவோம்.

    தெற்கே எவ்வாறு எடையேற்றுவது? வடக்கே கூடியுள்ள கூட்டத்தைப் போல மற்றொரு கூட்டத்தை நிற்க வைப்பதா?

    தேவையில்லை. ஒரே ஒரு முனிவனை நிற்கவைப்போம். அதுவும் குள்ளமான முனிவனை...

    என்னே அதிசயம். கோடானு கோடி மக்களுக்கு ஒரு குறுமுனி ஈடாவாரா?

    ஆம்! கோடானு கோடி மக்களின் பக்திக்கு ஈடாகத்தான் அந்த குறுமுனிவனின் பக்தி விளங்குகிறது.

    கும்பத்தில் தோன்றிய அகத்தியருக்கு ஈடு இணை யாருமில்லை பக்தியில்.

    எனவே அம்மையப்பன் தனது மைந்தன் அகத்தியனை அழைத்தான்.

    என் கண்ணே நீ தெற்கே நோக்கிச் செல்! அங்கே அறிவிற் சிறந்தோர் ஆயிரமாயிரம்! அங்கு சென்றால் உனக்கு அறிவு உலகத்தின் தலைமை பதவி கிடைக்கும் தித்திக்கும் செந்தமிழால் என்னை தினந்தோறும் பாடிடுவாய்.

    அப்பா தங்கள் திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்கில்லையா? சின்ன பிள்ளைதானே எல்லோர் வீட்டிலும் செல்லப்பிள்ளை! இந்த குள்ளப்பிள்ளையிடம் கண்ட குறை யாதோ? என்ற அகத்தியனுக்கு.

    குறையன்றுமில்லை கண்மணியே! உலகம் உன்னால் சமநிலை பெற வேண்டுமல்லவா? அதனால்தான் உன்னை அனுப்புகிறேன். என் திருமணக்கோலத்தைக் காணாமல் போகிறோமே என்று கலங்காதே! கோடானு கோடி மக்கள் காணப்போகும் அந்த அற்புதக் காட்சியை உனக்கு மட்டும் தனியாகக் காட்டுகிறேன். திருவேற்காட்டில் எனது திருமணக் காட்சியை தரிசிப்பாய் என ஆண்டவன் திருவாய் மலர்ந்தருளினான்.

    அந்த அகத்தியன் தென்னாடு வந்தான். தரிசனம் கண்டான். அந்த திவ்ய தரிசனம் அவனுக்கு மட்டுமல்ல. அன்று முதற்கொண்டு இன்று வரை திருவேற்காடு நோக்கி செல்லும் அனைவருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    வேலவன் வேல் பெற்ற வரலாறு

    அவுணர்களை மாய்க்க அவதரித்த முருகன் நந்தினிப் பசுவின் பாலால் அபிஷேகம் செய்யப்பட்ட வரலாற்றைக் கண்டோமல்லவா? அந்தப் பாலே ஆறாக பாலி ஆறாகப் பாய்தோடியது அல்லவா? அந்த ஆற்றின் கரையில் அமைந்த திருத்தலம்தான் வேற்காடு என்றோமல்லவா?

    அதே திருத்தலத்தில் வேலவனுக்கு அன்னையின் அருளாசியும் கிடைத்தது.

    வேதபுரீசனாக அப்பன் வேற்காட்டில் அமர்ந்தான்.

    பாலாம்பிகையாக அன்னை அவனுடன் உறைந்தாள். தன்பிள்ளைமேல் கொள்ளைப் பிரியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் அவனும் தாய்க்கு மகன்தானே கொடிய சூரனை மாய்ப்பதற்குக் குழந்தை முருகனால் கூடுமோ?

    அன்னையின் பாசம் ஒருநிமிடம் அலைகழித்தது.

    கண்ணுதலான் இதனைக் கவனித்தான்

    அன்னைக்குக் குறிப்புணர்த்தினான்

    கண்ணுதலோன் கண்நோக்க வேற்கண்ணி களிப்புற்றுக் குதூகலித்து அன்பு கூர்ந்து

    மண்ணவரும் விண்ணவரும் வாழ்வுறவும்

    அவுணர்குலம் அறக்களைவாய் என்றுரைத்து

    எண்ணற்ற எழுபரிதிச் செழுஞ்சுடரின் ஒளிவிஞ்சச்

    சுடர்வேலைக் கரத்தெடுத்து

    கண்மணியாம் சேயவனின் கரமீந்து அருள்புரிந்தாள்

    கண்ணுதலோன் உவகையுற்றான்

    என்று தேவி கருமாரியம்மன் புராணம் செப்பும் வண்ணம் வேல் பெற்றான் குமரக்கடவுள். அந்த வேல்&கந்தவேல்-கருமாரி அன்னையின் திருக்கரத்தால் பெற்ற வேல்-திருவேற்காட்டில் வழங்கப்பட்ட வேல் ஆகும். வேல் ஈந்த பாலாம்பிகை அன்னை வேற்கண்ணி எனப் பெயர் பெற்றாள்.

    அந்த வேற்கண்ணியைத் தொழுது பணிந்து அங்கே வேலால் ஒரு தீர்த்தம் செய்தான் வேதவல்லி மகன். அத்தீர்த்தமே வேலாயுதத் தீர்த்தமாகும்.

    • கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் பாரதிநகர், கரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் புண்மை யாக வாசனம், மகாகணபதி ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை பிரவேசபலி ஜைன வாசம், பூர்ணாகுதி,யந்திர ஸ்தாபனம்,விக்கிரக பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது.

    இன்று காலை4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம் நிகழ்ச்சிக்குப் பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் கருமாரியம்மன், பத்ரகாளி யம்மன், முத்தா ரம்மன், துர்க்கையம்மன், முக்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ நாகராஜா, நாககன்னி ஆகிய தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர 56-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுயம்பு, ஓட்டப்பிடாரம் தொகுதி சண்முகையா எம்.எல்.ஏ.மற்றும் சுற்று வட்டார பிரமுகர்கள், பாரதிநகர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×