என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
சத்திய தெய்வமே கருமாரியம்மா!
- குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
- திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா சிறுவாச்சூர் மதுரகாளியம்மா
கண்ணிரண்டும் உன்முகமே காணவேண்டும்-அம்மா
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நா உனையே பாடவேண்டும்-அம்மா
எல்லோரும் பக்தியோடு கையெடுத்து உன்னையே கும்பிடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன்நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடைய தாகவேண்டும்!
மண்ணடக்கும் தாயே பெரியபாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே!
குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்ரகாளியம்மா
வீரபாண்டியிலே கௌமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கங்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய் மொழியிலே முப்பந்தலிலே இசக்கிமாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்க நாயகியம்மா
சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயப்புரத்தம்மா வெக்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா
மண்ணளக்கும் தாயே!
வடநாட்டிலே காசி விசாலாட்சியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனகதுர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி
சாரதாம்பிகே-மூகாம்பிகே அம்மா
தங்க வயலிலே கங்கையம்மா
கேரளத்திலே சோற்றானிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே
மண்ணளக்கும் தாயே!
மலேசிய நாட்டிலே மகாமாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா
தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா
நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாட்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா
ஆரூரிலே சீதலாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொன்னையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுத்த தெய்வமே நாட்டரசன்
கோட்டை வாழ் என் கண்ணாத்தா
மண்ணளக்கும் தாயே!
படவேட்டிலே ரேணுகாபரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே நாகாத்தம்மா
மண்ணளக்கும் தாயே!
மயிலையிலே முண்டக்கண்ணியம்மா
சென்னையிலே அருள்மிகு தேவி
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாளபொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வட சென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்னமாரி-பெரியமாரியம்மா
கோவையிலேதண்டுமாரியம்மா-கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா
மண்ணளக்கும் தாயே!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்