search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருடாழ்வார் வழிபாடு"

    • சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
    • திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கருடாழ்வார் வழிபாடு மூலம் நமக்கு உண்டாகும் பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும் கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். கருட பகவானைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

    கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் திகழ்கிறார்.

    கருடனுடைய மகிமையை பற்றி ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்ப வர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகா மோதர், மல்லீபுஷ்ய பிரியர். மங்களாலயர், சோமகார், பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகரு டன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக் கொழுந்து, கதிர்ப்பச்சை. சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டு மென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது. உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க் கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்ப வர்களும் கருடாழ்வாரை புதன் கிழமை வழிபடுவது நல்லது. நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.

    வீட்டில் பணப் பிரச்சினை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள். தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் சிறு துரும்பாக மாறும்.

    ×