search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பங்கூழ்"

    • நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • குளிர்ந்த மோரில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக, அதிக வெப்பம் நிலவுகிறது. வெயிலில் வேலை செய்பவர்கள், வெளியில் பயணிப்போர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதன் காரணமாக, குளிர்பானம் மற்றும் பழரச கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. சீசனுக்கேற்ற தற்காலிக கம்பங்கூழ், நீர் மோர், மிக்ஸர் பழரசம் என நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பலரும் மோர் மற்றும் கம்பங்கூழ் குடித்து வெயில் தாக்கத்தை தணித்து வருகின்றனர்.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், குளிர்ந்த மோரில் கொத்த மல்லி, கறிவேப்பிலை, மிதமான உப்புடன் சீரகம் தூள் தூவி விற்பனை செய்யப்படுகிறது. மண்பானையில் ஊற்றி வைத்து மோர் மற்றும் கம்பங்கூழ் விற்பதால் குளிர்ச்சியாக உள்ளது. மக்கள் விரும்பி பருகுகின்றனர் என்றனர். 

    • உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது.

    இதனால் வீட்டுக் குள்ளே மக்கள் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டும்தான் வெளியில் வருகின்ற னர். இதனால் உடன்குடி பஜார் பகுதியில் வீதிவீதியாக பதனீர், கம்பங்கூழ், நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தினசரி காலையில் பதனீர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் கம்பங்கூழ் ஒரு டம்ளர் ரூ.20-க்கும், நுங்கு ரூ.10-க்கும், இளநீர் ரூ.25-க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.

    இது தவிர கரும்பு சாறு, எலுமிச்சை ஜூஸ், பழ ஜூஸ் என்று வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பொருட்களை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    ×