search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி மாஸ்டர்ஸ்"

    துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvIRN #IRNvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்றது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவையும், ஈரான், பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.



    இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 18-11 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 26 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் எடுத்தன. இறுதியில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvIRN #IRNvIND
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKOR #KORvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொண்டது.



    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 17-10 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 19 புள்ளிகளும், தென்கொரியா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



    மற்றொரு அரையிறுதி போட்டியில் ஈரான் 40-21 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வருகிற 1-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKOR #KORvIND
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் மூன்று லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில், இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, கென்யாவை எதிர்கொண்டது.

    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 29-5 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், கென்யா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 50-15 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 57-27 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND
    துபாயில் நடைபெற்று வரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 41-17 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvPAK #PAKvIND
    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் சமீபத்தில் தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானையும், அடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில்  கென்யாவையும் வீழ்த்தியது.



    இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது தடவையாக இன்று மோதின. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 18-9 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 23 புள்ளிகளும், பாகிஸ்தான் 8 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 41-17 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
    இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvPAK #PAKvIND
    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. 

    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் கென்யா வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் கென்யா வீரர்களை அவுட் ஆக்கி புள்ளிகளை தட்டிச்சென்றனர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 27-9 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 21 புள்ளிகளும், பாகிஸ்தான் 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 48-19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் 54-24 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 25-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.  #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKEN #KENvIND
    துபாயில் இன்று தொடங்கிய கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக ஆட்டத்தில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvPAK #PAKvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு அஜய் தாகூர் தலைமை தாங்கினார். இந்த போட்டியை காண பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சென்றிருந்தார்.

    இதில் இந்தியா டாஸ் வென்றது. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய வீரர்களை பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேசமயம் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை அவுட் ஆக்கினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 22-9 என முன்னிலை வகித்தது. பாகிஸ்தான் அணி முதல் பாதிநேர ஆட்டத்தில் ஒரு இந்திய வீரரை கூட பிடிக்கவில்லை.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பாகிஸ்தான் சற்று சுதாரிப்புடன் விளையாடியது. இருப்பினும் இந்திய வீரர்கள் அதற்கு ஈடுகொடுத்து விளையாடினர். இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 14 புள்ளிகளும், பாகிஸ்தான் 11 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.



    இதை தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஈரான் - தென்கொரியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா நாளை தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.  #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvPAK #PAKvIND
    ×