search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபடி மாஸ்டர்ஸ் - தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
    X

    கபடி மாஸ்டர்ஸ் - தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

    துபாயில் நடைபெற்றுவரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKOR #KORvIND

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொண்டது.



    தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 17-10 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 19 புள்ளிகளும், தென்கொரியா 10 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.



    மற்றொரு அரையிறுதி போட்டியில் ஈரான் 40-21 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வருகிற 1-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #KabaddiKurfew #KabaddiMasters #RaidOn #INDvKOR #KORvIND
    Next Story
    ×