search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு தீவிரம்"

    • மாஞ்சா நூலுக்கு பறவைகளும், விலங்குகளும் கூட தப்பவில்லை.
    • காயம் அடைந்த பறவைகள் குறித்து அவசர தேவைக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை 98201 22602 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

    ராயபுரம்:

    சென்னை பகுதியில் கடந்த காலங்களில் அதிகஅளவில் கட்டுப்பாடின்றி அதிக அளவில் காற்றாடி பறக்கவிடப்பட்டு வந்தது. வடசென்னை பகுதியில் காற்றாடி பறக்கவிடும் போட்டிகளும் நடைபெற்றன.

    இதில் சிலர் மாஞ்சா நூலை பயன்படுத்தியதால் அவை அறுந்து காற்றில் பறந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கழுத்தில் சுற்றி அறுத்த சம்பவம் அதிக அளவில் நடந்து வந்தன. இதில் உயிர்பலியும் ஏற்பட்டு உள்ளது. ஏராளமானோர் மாஞ்சா நூலில் சிக்கி பலத்த காயம் அடைந்து உயிர்தப்பிய சம்பவமும் நடந்து உள்ளது. இந்த மாஞ்சா நூலுக்கு பறவைகளும், விலங்குகளும் கூட தப்பவில்லை.

    இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை போலீசார் மாஞ்சா நூல் விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதித்தனர். எனினும்ஆன்லைன் மூலம் மாஞ்சா நூலை வாங்கி காற்றாடி பறக்கவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆன்லைன் விற்பனையிலும் மாஞ்சாநூலுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வண்ணார ப்பேட்டை, எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு, ராயபுரம் பகுதி ஆட்டுத்தொட்டி, புது வண்ணாரப்பேட்டை பகுதி கிராஸ் ரோடு, கொருக்குப் பேட்டை போன்ற பகுதிகளில் மாஞ்சா நூல் விற்பனை அமோகமாக இருந்து வந்தது. இந்த இடங்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பல்வேறு வகை மாஞ்சா நூல்கள் உள்ளதில் சீன மாஞ்சா நூல் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இந்த நூல் கண்ணுக்கு தெரியாது என்பதாலும், ஒருவரின் உடலை கிழித்து உயிரை பறிக்கும் திறன் கொண்டது என்பதாலும் இந்த வகை மாஞ்சா நூலை மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இருப்பினும் சிலர் தடையை மீறி அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    பலரது உயிரை குடித்து உள்ள இந்த சீன மாஞ்சா நூலுக்கு குஜராத், டெல்லி, மராட்டியம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, சண்டிகார், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நிரந்தர தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் காற்றாடி விடும் போட்டிக்காக வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் கடை மற்றும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறதா என்று உளவுத்துறையும், போலீசாரும் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையிலும் இதற்கு முன்பு ஆன்லைனில் வாங்கி சீனா மாஞ்சா நூல் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஏற்கனவே மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். காயம் அடைந்த பறவைகள் குறித்து அவசர தேவைக்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை 98201 22602 என்ற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

    இதற்கிடையே கடந்த அக்டோபர் 30-ந் தேதி மாஞ்சா நூலினை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், கொள்முதல் ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தத் தடை உத்தரவை மீறுப வர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசா ணையில் வெளியி டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • ஜெய்ஹிந்துபுரத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பி.பி.சி. நிறுவனம், ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில் கலவரத்துக்கு சூத்திரதாரி யார்? என்பது தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த ஆவண படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பி.பி.சி. ஆவணப்படம் தடையை மீறி திரையிடப்பட்டு வருகிறது.

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், வீரகாளியம்மன் கோவில் தெருவில் பி.பி.சி. ஆவணப்படம் திரையிடப்படும் என்று அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தி ருந்தது. நேற்று அந்தப் படத்தை திரையிடுவதற்கான முயற்சி நடந்தது.

    அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள், பி.பி.சி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தப் படத்தை திரையிடக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பி.பி.சி. ஆவண படத்தை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திரையிடுவது என்று நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    படம் பார்க்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக பாப்கார்ன் வழங்கவும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் பி.பி.சி. ஆவண பட வெளியீட்டை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன.

    இதையடுத்து ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • ஷார்ஜாவில் இருந்து கோவை வந்தார்.
    • 141 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

    கோவை,

    நாடு முழுவதும் புதியவகை கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு சூழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவருடன் பயணித்த சக பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: -

    அரசு வழிகாட்டுதலின் படி கோவை விமான நிலையத்துக்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரேண்டம் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்னு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவைக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் தற்போது வரை வந்த மொத்தம் 4,230 பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 141 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதல் 2 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    ×