search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணிப்பு"

    • 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று கணித்து இருந்தார்.
    • உடல்நிலை காரணமாக டாக்டர்கள் அறிவுறுத்தலால் மன்னர் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.

    15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துப் பல துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார்.

    இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாகக் கணித்தார்.

    இவர் 2024-ம் ஆண்டு முடியாட்சிக்கு கடினமான காலகட்டமாக இருக்கும் என்று கணித்து இருந்தார். அதுபோன்று இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மருமகள் இளவரசி கேத் மிடில்டன் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நாஸ்ராடா மசின் புத்தகத்தில் தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    இதில் தீவுகளின் மன்னர் என்பது சார்லசைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.அவர் கூறியது போல மன்னர் சார்லஸ் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் பதவி விலகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் தானாகப் பதவி விலகுவார் அல்லது உடல்நிலை காரணமாக டாக்டர்கள் அறிவுறுத்தலால் மன்னர் பொறுப்பில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ஹாரி மன்னர் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறார். இதன் காரணமாகவே நாஸ்ட்ராடாமஸ் சொல்லும் எதிர்பாராத வாரிசு ஹாரிதான் என்கிறார்கள்.

    • இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.
    • தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் 1½ மாதத்தில் எப்போதும் 283 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 243 மி.மீ. அளவுக்கே மழை பெய்துள்ளது. இயல்பைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது புயலாக மாறி வங்கதேச கடற்கரை நோக்கி சென்றுவிட்டது.

    இதனால் தமிழகத்தில் புயலால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்து உள்ளது.

    இந்நிலையில் வருகிற 19-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராம நாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மறுநாள் 20-ந்தேதி தமிழகம்-புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.

    • தி.மு.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • கல்விக்கடன் ரத்து என்றவுடன் கம்யூட்டர் தந்த எங்களை மறந்து விட்டு இளைஞர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து விட்டார்கள் என்றார்.

    திருமங்கலம்

    எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகியும் இதுவரை ரூ. 1000 உதவித்தொகை வரவில்லை. கல்விக்கடன் ரத்து என்றவுடன் கம்யூட்டர் தந்த எங்களை மறந்து விட்டு இளைஞர்கள் தி.மு.க. விற்கு வாக்களித்து விட்டார்கள்.

    மின்சார கட்டணத்தை உயர்த்தாத ஒரே அரசு ஜெயலலிதா அரசு. சொத்து வரி உயர்த்துகிறீர்கள் என கேட்டால் உடனே மத்திய அரசு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறபோது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. நீங்கள் சொத்து வரியை உயர்த்துங்கள் என்று சொன்னது இப்போது சொன்னதை போல தான் அப்போதும் சொன்னது. ஆனால் எடப்பாடி என் தாய் தமிழ்நாட்டு மக்கள் மீது சொத்து வரியை திணிக்க மாட்டேன். தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ளும் என்றார்.

    தமிழக சட்டசபையில் சட்டம் ஒழுங்கு சீரழிவு குறித்து எடப்பாடி பழனி சாமி ஆதாரபூர்வமாக எடுத்துரைத்துள்ளார். 50 ஆண்டு திராவிட ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதில் 32 ஆண்டு கால ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்பதால் தான்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறு தியை எப்போது நிறை வேற்றுவீர்கள் என்றால் பதில் இல்லை. உங்களுடைய நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள்.

    தற்போது உள்ள மக்கள் விரோத அரசு . விளம்பர வெளிச்சத்தில் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது. நடுநிலையோடு இருக்கின்ற அரசு அலுவலர்களே தப்பு கணக்கு போட்டு விட்டீர்கள். தப்புதாளங்களை போட்டு விட்டு மாட்டிக் கொள்ளா தீர்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தே தீரும்.

    ஜனநாயக நாட்டில் மேடையில் பேசுவதற்கு நாங்கள் கூமுட்டைகள் அல்ல. காவல்துறை அதிகா ரிகளே ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் அடித்த சல்யூட்டால் நாங்கள் மயங்குபவர்கள் அல்ல. எல்லா சட்டமும் தெரிந்தவர்கள் நாங்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுக்கு மேடை போட அனுமதி தரவில்லை என்றால் அதற்கு கார ணமானவர்கள் வீட்டில் நிம்மதியாக உறங்க முடியாது. உங்கள் சட்டை யையும் தொப்பியையும் கழட்டும் வரை நாங்கள் போராடுவோம். அராஜ ஆட்சியை ஒழித்து மீண்டும் கோட்டையை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×