search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது-ஆர்.பி.உதயகுமார் கணிப்பு
    X

    டி.கல்லுப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். 

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது-ஆர்.பி.உதயகுமார் கணிப்பு

    • தி.மு.க. ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • கல்விக்கடன் ரத்து என்றவுடன் கம்யூட்டர் தந்த எங்களை மறந்து விட்டு இளைஞர்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து விட்டார்கள் என்றார்.

    திருமங்கலம்

    எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 20 மாதம் ஆகியும் இதுவரை ரூ. 1000 உதவித்தொகை வரவில்லை. கல்விக்கடன் ரத்து என்றவுடன் கம்யூட்டர் தந்த எங்களை மறந்து விட்டு இளைஞர்கள் தி.மு.க. விற்கு வாக்களித்து விட்டார்கள்.

    மின்சார கட்டணத்தை உயர்த்தாத ஒரே அரசு ஜெயலலிதா அரசு. சொத்து வரி உயர்த்துகிறீர்கள் என கேட்டால் உடனே மத்திய அரசு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி இருக்கிறபோது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. நீங்கள் சொத்து வரியை உயர்த்துங்கள் என்று சொன்னது இப்போது சொன்னதை போல தான் அப்போதும் சொன்னது. ஆனால் எடப்பாடி என் தாய் தமிழ்நாட்டு மக்கள் மீது சொத்து வரியை திணிக்க மாட்டேன். தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ளும் என்றார்.

    தமிழக சட்டசபையில் சட்டம் ஒழுங்கு சீரழிவு குறித்து எடப்பாடி பழனி சாமி ஆதாரபூர்வமாக எடுத்துரைத்துள்ளார். 50 ஆண்டு திராவிட ஆட்சி காலத்தில் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதில் 32 ஆண்டு கால ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்பதால் தான்.

    தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறு தியை எப்போது நிறை வேற்றுவீர்கள் என்றால் பதில் இல்லை. உங்களுடைய நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவெடுத்துவிட்டால் நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள்.

    தற்போது உள்ள மக்கள் விரோத அரசு . விளம்பர வெளிச்சத்தில் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி நீண்ட காலம் நிலைக்காது. நடுநிலையோடு இருக்கின்ற அரசு அலுவலர்களே தப்பு கணக்கு போட்டு விட்டீர்கள். தப்புதாளங்களை போட்டு விட்டு மாட்டிக் கொள்ளா தீர்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தே தீரும்.

    ஜனநாயக நாட்டில் மேடையில் பேசுவதற்கு நாங்கள் கூமுட்டைகள் அல்ல. காவல்துறை அதிகா ரிகளே ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் அடித்த சல்யூட்டால் நாங்கள் மயங்குபவர்கள் அல்ல. எல்லா சட்டமும் தெரிந்தவர்கள் நாங்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுக்கு மேடை போட அனுமதி தரவில்லை என்றால் அதற்கு கார ணமானவர்கள் வீட்டில் நிம்மதியாக உறங்க முடியாது. உங்கள் சட்டை யையும் தொப்பியையும் கழட்டும் வரை நாங்கள் போராடுவோம். அராஜ ஆட்சியை ஒழித்து மீண்டும் கோட்டையை பிடிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×