search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் ஊழியர்"

    • தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவரது மகன் பிரதீப் கண்ணா (வயது 27),

    இவர் சேலம் குகையில் உள்ள பர்பிகுயின் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஓமலூரில் இருந்து சேலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சேலம் குரங்குச்சாவடி சந்தை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது பிரதீப் கண்ணா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகம் உள்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அவர் கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் ப ரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் விரைந்து வந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த பிரதீப்கண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது, விபத்துக்கு காரணமான வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்காமல் இருந்ததும், இரவு நேரத்தில் பிரதீப் கண்ணா மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேகத்தடையை கவனிக்காமல் வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த சோக சம்பவம் அரங்கேறியதும் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஓடும் பஸ்சில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
    • கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார்(வயது46). இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் ராஜ பாளையம் பி.டி.ஆர்.நகரில் வசிக்கும் இவரது உறவினர் கணேசனை பார்ப்பதற்காக தனியார் பஸ்சில் ராஜ பாளையம் வந்தார். புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்கி சென்றனர். ஆனால் கணேசன் இறங்கவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த பஸ் கண்டக்டர் பாக்யராஜ், அவரது அருகில் சென்று பார்்த்தபோது பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டை, போன் அழைப்பு களை வைத்து அவரது உறவினரான கணேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அங்கு வந்த கணேசன், ஆம்புலன்சு மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிருஷ்ண குமாரை கொண்டு சென்றார். அங்கு டாக்ட ர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    பஸ்சில் பயணம் செய்துவந்தபோதே கிருஷ்ணகுமார் இறந்தி ருக்கிறார். இதுகுறித்து கணேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமார் இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து கன்னியாகுமரி ரத வீதியில் அமைந்து உள்ள ஓட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார்
    • சங்கர பாண்டியன் இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகை

    கன்னியாகுமரி :

    பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி (வயது 38).

    இவர் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து கன்னியாகுமரி ரத வீதியில் அமைந்து உள்ள ஓட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று காலையில் வேலை முடித்துவிட்டு சம்பளம் வாங்கி விட்டு ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு தான் தங்கி இருந்த லாட்ஜுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில்அவர்அந்த லாட்ஜில் தனது வேட்டியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    அவருடன் வேலை பார்த்து வந்த ஒருவர் இவர் தங்கி இருந்த லாட்ஜுக்கு வந்துள்ளார். அறைக் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். அப்போது சங்கரபாண்டி தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றிஅவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரபாண்டியன் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இதற்கிடையில் சங்கர பாண்டியன் இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள் சங்கரபாண்டியன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×