search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓடுதளம்"

    • கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
    • விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).

    கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.

    அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.

    ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
    • விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

    கோவை,

    கோவை வ.உ.சி. மைதானம் அருகே நேரு விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

    இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள கால்பந்து மைதானத்தை சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்த 400 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளம் இருந்தது. கடந்த 2008-ல் அமைக்கப்பட்ட ஓடுதளம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் ஓடுதளத்தை சீரமைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    புதிதாக சிந்தடிக் ஓடுதளம் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.6.55 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. மேலும் விளையாட்டு அரங்கில் சிறப்பு மராமத்து பணி ரூ.65 லட்சம் மதிப்பில் நடந்தது.

    சிந்தடிக் ஓடுதளம் பாதை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தடிக் ஓடுதளம் பாதையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், தடகள விளை யாட்டு வீரர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சிந்தடிக் ஓடுதளம் தங்களின் பயிற்சி மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நேரு விளையாட்டு அரங்கின் ஓடுதளம் மற்றும் மைதானம் ஆகியவற்றை சீரமைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர்கள் கூறினர்.  

    • அன்னை சத்யா மைதானத்தில் குழந்தைகள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை.
    • இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அவரிடம் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

    தொடர்ந்து மைதானத்தில் சர்வதேச செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருவதை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    இதையடுத்து இயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து மைதானம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டார். அப்போது அவர் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலும் மைதானத்தில் குழந்தைகள் விளையாடும் அரங்கம் அமைக்கப்படும் என்றும், மைதானத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் மருத்துவ கல்லூரி பகுதி தி.மு.க. செயலாளர் சதாசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் அண்ணா.பிரகாஷ், சுகந்தா, ஓய்வு பெற்ற மாவட்ட அலுவலர்கள் மோகன், காந்தி, பயிற்சியாளர்கள் பாபு, ரஞ்சித், மகேஷ், நீலவேணி, தி.மு.க. நிர்வாகிகள் சேகர், ரங்கராஜ், எடிசன், இளங்கோ, கார்த்தி, வினோத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    ×