search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.என்.ஜி.சி"

    • பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளித்து வருகிறார்.
    • இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் பகுதியைச் சேர்ந்த கிரண்ட் மாஸ்டர்எஸ்.பாண்டியன் அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளான திருமருகல் திருப்பு கலூர், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, வவ்வாலடி, கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 20 ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற பின் தங்கிய மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தற்காப்பு கலை (டேக்வாண்டோ) பயிற்சி அளித்து வருகிறார்.

    மேலும் இம்மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் 98, சில்வர் 75,பித்தளை 112 உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பயிற்சியாளர் மாஸ்டர் பாண்டியனை ஜாக்கி புக் ஆப் வேல்டு என்ற நிறுவனம் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.அதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஓ.என்.ஜி.சி யின் அதிகாரி சம்பத்குமார், சீனியர் செக்யூரிட்டி மேனேஜர்கள் முரளி கிருஷ்ணன்,அஜய் மாலிக், ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர் பாண்டியனை பாராட்டினர்.

    • மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
    • மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 400மீ குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓ.என்.ஜி.சி செயல் இயக்குனர் அனுராக் தலைமையில் செல்வராஜ் எம்.பி. திறந்து வைத்து ஊராட்சியிடம் ஒப்படைத்தார்.

    இவ்விழாவில் மாரிமுத்து எம்.எல்.ஏ, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓ.என்.ஜி.சி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமானபிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓ.என்.ஜி.சி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் அனுராக் முன்னிலையில் செல்வராஜ் எம்.பி. மற்றும் மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு குறைந்த காலத்துக்குள் இவற்றை அமைத்துக் கொடுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த செல்வராஜ் எம்.பி., அவை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெள்ளம்இல்லாத காலங்களில் மாணவர்களுக்கான வகுப்பறைகளாகவும் பயன் தரும் என்று தெரிவித்தார்.

    இவ்விழாவில் ஒன்றி யப் பெருந்தலைவர்பாஸ்கரன், துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி ராமன், ஒன்றிய கவுன்சிலர் வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.என்.ஜி.சி, ஒரு மத்திய அரசு நிறுவனம், காவிரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.
    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் இருந்து ஓ.என்.ஜி.சி வெளியேறினால் காவிரி படுகையில் பத்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கங்கள், விவசாய நலச்சங்கங்கள், உள்நாட்டு மீனவர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

    மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, இயற்கை எண்ணெய் எரிவாயு கழகமான ஓ.என்.ஜி.சி, ஒரு மத்திய அரசு நிறுவனம், காவிரி படுகையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தை சார்ந்து பல தொழில்கள், வணிக நிறுவனங்கள், நேரடி மற்றும் மறைமுக தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகிறார்கள்.ஓ.என்.ஜி.சி மக்கள் பணியில் தொடர்ந்து செயலாற்றி கொண்டு இருக்கிறது, ஓ.என்.ஜி.சி நிறுவனம் பலமுறை மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தவில்லை எனவும், எதிர்காலத்தில் அப்படி எந்த திட்டமும் செயல்படுத்துவதில்லை என உறுதியாக தெரிவித்து விட்டது.

    இந்தியாவின் எண்ணெய் எரிவாயு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசுக்கு ஆண்டிற்கு ஆயிரம் கோடிக்கு மேல் ராயல்டி தொகை வழங்கப்பட்டு நலத்திட்டங்கள செயல்படுத்தப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், இலவச தொழில் பயிற்சியும் வழங்குகிறது. சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கிராம, நகர பகுதிகளில் போர்வெல் அமைத்து சுத்தமான குடிநீர், கழிவறை கட்டுதல், குளம், குட்டை' வாய்க்கால் தூர்வாருதல், சமுதாய கூடங்கள், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், சாலை வசதிகள், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல், படித்த இளைஞர்களுக்கு இலவச, படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை, ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குதல் போன்ற நலத்திட்ட களை செயல்படுத்துகிறது. குறிப்பாக புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளும் உணவும் வழங்கப்பட்டது. கஜா புயலின் போது வழங்கிய நிவாரண உதவிகள இன்னும் மக்கள் மனதில் நிலைத்துள்ளது.

    இப்படி பல்வேறு வகையில் நாட்டை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் குறித்து ஆதாரமில்லாத குற்றசாட்டுகளை சிலர் கூறிவதுடன் இந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். எனவே அவதூறு பரப்பும் தனிநபர்கள், தற்காலிக அமைப்புகள் மீது தமிழக அரசு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

    ×