search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒசாமா பின்லேடன்"

    • லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.
    • நான் ஒசாமா பின்லேடன், அப்துல்லா ஆலம் போன்றவர்களை சந்தித்தது கிடையாது.

    பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது. இவனுக்கு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அப்துல் ரகுமான் மக்கி லாகூர் ஜெயிலில் இருந்தபடி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார், அந்த வீடியோவில் அவர் தனக்கு அல்கொய்தா அமைப்புடன் எந்த தொடர்பும் கிடையாது. நான் ஒசாமா பின்லேடன், அப்துல்லா ஆலம் போன்றவர்களை சந்தித்தது கிடையாது. இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நான் படிக்க வில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    • சார்லஸ் அறக்கட்டளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
    • பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக செய்தி வெளியானது.

    லண்டன்:

    அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

    இதற்கிடையே, சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒசாமா பின்லேடனின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இளவரசர் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா என பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:

    சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.

    ஒசாமா பின்லேடனுக்கும், அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்தத் தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை. பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டுள்ளது.

    அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

    ×