search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பின்லேடனை சந்திக்கவில்லை- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கபட்டவன் மறுப்பு
    X

    பின்லேடனை சந்திக்கவில்லை- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கபட்டவன் மறுப்பு

    • லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது.
    • நான் ஒசாமா பின்லேடன், அப்துல்லா ஆலம் போன்றவர்களை சந்தித்தது கிடையாது.

    பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்க தலைவர்களுள் ஒருவரான அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவித்தது. இவனுக்கு பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அப்துல் ரகுமான் மக்கி லாகூர் ஜெயிலில் இருந்தபடி ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார், அந்த வீடியோவில் அவர் தனக்கு அல்கொய்தா அமைப்புடன் எந்த தொடர்பும் கிடையாது. நான் ஒசாமா பின்லேடன், அப்துல்லா ஆலம் போன்றவர்களை சந்தித்தது கிடையாது. இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நான் படிக்க வில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×