search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்ஹாரன்கள்"

    • சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர்.
    • அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின்பேரில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் சங்ககிரி புதிய பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பொறுத்தி இருந்த 7 தனியார் பஸ்களுக்கு சோதனை செய்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர்.
    • மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில் 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்இடி பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகேசன், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர். அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை அகற்றினர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில் 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்இடி பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    • அதிக சத்தம் எழுப்பும் வகையில் 25 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பேருந்து நிலைய வளாகத்தில் விபத்தில்லா போக்குவரத்து குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையில் காங்கயம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்பாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அதிக சத்தம் எழுப்பும் வகையில் 25 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒழிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பயன்படுத்துவது குறித்து புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்தாா். தொடா்ந்து பேருந்து நிலைய வளாகத்தில் விபத்தில்லா போக்குவரத்து குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. 

    விதிகளை மீறி ஏர் ஹாரன்கள் பொருத்தி இருந்ததற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது .

     பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து ஆய்வாளர்கள் நிர்மலா தேவி (பல்லடம்), ஈஸ்வரன் (காங்கேயம்) உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்பாடு குறித்து சோதனை மேற்கொண்டனர்.

    சுமார் 100க்கும் மேற்பட்ட பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 35 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விதிகளை மீறி ஏர் ஹாரன்கள் பொருத்தி இருந்ததற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது .மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
    • 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர்.

    உடுமலை : 

    உடுமலை பகுதியில் ஒலி மாசு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இது குறித்து புகார்கள் வரவே மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்

    இதில் 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர். சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×