search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன் சாவு"

    • அனுமந்தீர்த்தம் பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு ள்ளானது.
    • விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சடையம்பட்டி வெங்கடேசன் (வயது45). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி வள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். வள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் பொய்யப்பட்டியில் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மாலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் அனுமந்தீர்த்தம் பகுதி அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு ள்ளானது.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அரூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வெங்க டேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • மணிகண்டன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கோபி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டன் அந்த மில்லில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன் சாவு.
    • மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவரது மகன் சரவணன் (வயது 25).  டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படித்துள் ளார். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு துபாயில் உள்ள அஜ்மன் பகுதியில் உள்ள நிறுவனத்திற்க்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றார்  இவர் அவ்வப்போது பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

      இந்நி லையில் நேற்று இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்ட நபர் சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் செய்வது அறியாமல் கதறி அழுதனர். இதுகுறித்து சரவணனின் பெற்றோர் கூறுகையில், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக நிறுவத்தினர் கூறுகின்றனர். எனது மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்  வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×