search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எல்.ஏ. திறப்பு"

    • மேலூர் அருகே பயணிகள் நிழற்குடை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியம் வண்ணாம்பாறைபட்டி ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-சிவகங்கை மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இதில் மேலூர் யூனியன் தலைவர் பொன்னுசாமி, வண்ணாம்பாறைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், துணைத் தலைவர் சின்ன கருப்பு, மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், யூனியன் பொறியாளர்கள் மணிமாறன், நெடுஞ்செழியன், உறங்கான்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெள்ளலூர் இளங்கண்ணன், கோட்டநத்தம்பட்டி கந்தப்பன், கிடாரிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே தும்பைபட்டி ஊராட்சியில் சமுதாய கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது.

    மேலூர்

    கொட்டாம்பட்டி ஒன்றியம் தும்பைபட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டியில் மேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சமும், கனிமம் மற்றும் குத்தகை நிதி திட்டத்தின் கீழ் 10 லட்சமும் மொத்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் கொட்டாம்பட்டி ஒன்றிய தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள்தலைவர் வெற்றிச்செழியன், தும்பைபட்டி ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பொண்ணு முருகன், ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சென்னகரம்பட்டி பழனிதுரை, மேலவளவு விஜயராகவன், கிடாரிப்பட்டி சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் மலைசாமி, அட்டப்பட்டி கந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், சமூக ஆர்வலர் தேவராஜ், தெற்கு ஒன்றிய பாசறை தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் ரோபோட்டிக் பொருட்காட்சியை காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் நடத்தும் மாபெரும் ரோபோட்டிக் பொருட்காட்சி நேற்று (25-ந்தேதி) முதல் 30 நாட்களுக்கு தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலை வகித்தார். நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் செல்வராணி விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பொருட்காட்சியில் குழந்தைகளை மகிழ்விக்க பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜெயன்ட்வீல், கொலம்பஸ், டிஸ்கோ, ஹெலிகாப்டர், டிராகன் ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற பொழுது போக்கு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

    சாப்பிட்டு மகிழ வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், குழந்தை களுக்கு தேவையான பொம்மை வகைகள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் செய்திருந்தார்.

    • சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் சிவகங்கை உழவர் சந்தை அருகே புதிய நூலக கட்டிடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, ஒப்பந்ததாரர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமு, ராமதாஸ், விஜயக்குமார், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கோபி, பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், வட்டசெயலாளர் அருண்குமார் தங்கவேலு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×