என் மலர்
நீங்கள் தேடியது "உலக யானைகள் தினம்"
- தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளது.
- யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது
யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது
இந்நிலையில், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க உதவும் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட கேமராக்கள் கொண்ட நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் பயன்பாடு தொடங்கிய நவம்பர் 2023-ம் ஆண்டு முதல் ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
- . யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.
ஈரோடு:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி உலக யானையில் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
யானைகளின் சாணத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகள் காடுகளில் பரப்புகின்றன. சாணத்தில் உள்ள பலவகை பூச்சி இனங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. இவ்வாறு யானைகள் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன.
அதனால்தான் யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை மேகமலை, களக்காடு - முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள ஆய்வு இயக்குனர் ராஜ்குமார் கூறும்போது,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், பர்கூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. யானைகள் வாழக்கூடிய உகந்த இடமாக இந்த வனப்பகுதி உள்ளது. கடைசியாக எடுத்த கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை 720 -ல் இருந்து 780 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய வனப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும் சூழலில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மட்டும் 25 சதவீதம் யானைகள் வசித்து வருகிறது.
தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. யானைகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் இருந்தால் அந்த வனப்பகுதி வளமாக இருக்கும்.
மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனசரகத்தில் 780-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. சத்தியமங்கலம் வனக்கோட்டத்தை பொறுத்தவரை யானை வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால் யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது யானைகளின் வழித்தடங்களில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்தமாக கணக்கெடுப்பின் அடிப்படையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என்றார்.
- 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம்.
- இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.
சென்னை:
உலக யானைகள் நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் இயற்கை மரபையும் வரலாற்றையும் செழுமைப்படுத்துவதில் யானைகளின் அளப்பரிய பங்கினைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.
கோவையில், ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் யானைகள் நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, மதுக்கரையில் நாம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பைப் பார்வையிட உள்ளார். இந்த அமைப்பின் மூலம் 2,800 முறை யானைகள் ரெயில் தண்டவாளத்தைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளன. இதனால் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஒரு யானை கூட ரெயில் மோதி உயிரிழக்காமல் காப்பாற்றியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தெப்பக்காட்டில் யானைப் பாகர்களுக்கான கிராமத்தையும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தொடங்கி வைத்தேன். நமது யானைகளை அக்கறையோடு பராமரிக்கும் பாகர்களுக்கான சுற்றுச்சூழலோடு இயைந்த வீடுகளை அது கொண்டுள்ளது. யானைகளைப் பாதுகாப்பதோடு யானைப் பாகர்களின் நலனையும் இது மேம்படுத்துகிறது. இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழச் செய்ய இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும்.
- ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும்.
யானைகள்...
குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்தமான விலங்கினம்.
உருவத்தில் மிகப்பெரியதாக இருந்தாலும், பொதுவாக அவைகள் மிகவும் சாதுவான குணம் கொண்டவை. ஆனால் அதனிடம் வம்பிழுத்தால்... அது மிரண்டால்.... தாங்காது. துவம்சம் செய்துவிடும்.
யானைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், அவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
உலக அளவில் 2 வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆப்பிரிக்க யானை மற்றொன்று ஆசிய யானை. இந்த 2 வகையான யானைகளுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன.
குறிப்பாக ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் இரண்டுக்குமே தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உள்ளன. தந்தம் இல்லாத ஆண் யானைகளும் காணப்படுகின்றன அவைகள் 'மக்னா' என்று அழைக்கப்படுகின்றன.
ஆப்பிரிக்க யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு மேலாக நீண்டு இருக்கும். ஆசிய யானைகளுக்கு காதுகள் கழுத்தின் உயரத்திற்கு கீழே இருக்கும். கால்விரல்களை பொறுத்தவரை ஆப்பிரிக்க யானைகளுக்கு முன்னங்காலில் 4 அல்லது 5 விரல்களும், பின்னங்கால்களில் 3 அல்லது 4 விரல்களும் இருக்கும். ஆசிய யானைகள் முன்னங்கால்களில் 5 விரல்களும், பின்னங்கால்களில் 4 விரல்களும் இருக்கும். முதுகு பகுதியானது ஆப்பிரிக்க யானைகளுக்கு குழிவிழுந்து காணப்படும். ஆசிய யானைகளின் முதுகு பகுதி வளைந்து காணப்படும்.
ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், சீனா, தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 13 நாடுகளில் காணப்படுகின்றன.
ஆண் யானை 14 முதல் 15 வருடத்திலும், பெண் யானை 12 முதல் 13 வருடத்திலும் பருவமடையும். யானையின் கர்ப்பகாலம் 21 முதல் 22 மாதங்கள் ஆகும். யானைகளுக்கு கண்பார்வை மனிதனைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் நுகரும் தன்மை அதிகம். யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகம்.

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.
யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன. சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது. யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.
யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது. எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.
- யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர்.
வண்டலூர்:
உலக யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. வாழும் இனங்களில் யானைகள் முக்கியமானவை. ஏனென்றால் இவைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யானைகளை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்றும் அழைப்பார்கள். யானைகள் பல வழிகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. பாதைகள் உருவாக்குதல் மரக்கிளைகளை கத்தரித்தல், விதைகள் பரப்புதல், வறண்ட காலங்களில் ஆற்றுப்படுகைகளை தோண்டி நீர் பாசன துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு உதவுகின்றன.
யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர். இப்பூங்காவில் ரோகினி மற்றும் பிரக்ருதி ஆகிய இரண்டு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சகோதரி யானைகள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களில் பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
இவ்விழாவில் யானைகளுக்கு பலாப்பழம், தர்பூசணி, கரும்பு, வெல்லம், தென்னங்கீற்றுக்கள் மற்றும் மூங்கில் இலைகள் புற்கள் ஆகியவை தீவனத்துடன் வழங்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தை யானைகள் விரும்பி உண்டு மகிழ்ந்தன.






