என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக யானைகள் தினம்"
- யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர்.
வண்டலூர்:
உலக யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. வாழும் இனங்களில் யானைகள் முக்கியமானவை. ஏனென்றால் இவைகள் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யானைகளை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் என்றும் அழைப்பார்கள். யானைகள் பல வழிகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. பாதைகள் உருவாக்குதல் மரக்கிளைகளை கத்தரித்தல், விதைகள் பரப்புதல், வறண்ட காலங்களில் ஆற்றுப்படுகைகளை தோண்டி நீர் பாசன துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு உதவுகின்றன.
யானைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆகஸ்டு 12 உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
யானைகள் தினத்தையொட்டி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் யானைகள் விரும்பும் அனைத்து வகையான உணவுகளை அளித்து யானைகள் தினத்தை கொண்டாடினர். இப்பூங்காவில் ரோகினி மற்றும் பிரக்ருதி ஆகிய இரண்டு பெண் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சகோதரி யானைகள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களில் பார்வையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
இவ்விழாவில் யானைகளுக்கு பலாப்பழம், தர்பூசணி, கரும்பு, வெல்லம், தென்னங்கீற்றுக்கள் மற்றும் மூங்கில் இலைகள் புற்கள் ஆகியவை தீவனத்துடன் வழங்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தை யானைகள் விரும்பி உண்டு மகிழ்ந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்