என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நவம்பர் 2023 முதல் ரெயில் மோதி ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை: வனத்துறை தகவல்
- தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளது.
- யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக வனப்பகுதிகளில் 3,063 யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது
யானைகள் இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் யானைகள் வாழ்வதற்கான உகந்த இடமாக உள்ளது. யானைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது
இந்நிலையில், தண்டவாளத்தைக் கடக்கும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க உதவும் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட கேமராக்கள் கொண்ட நுண்ணறிவு எச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் பயன்பாடு தொடங்கிய நவம்பர் 2023-ம் ஆண்டு முதல் ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Next Story






