search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சாகமாக"

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதியினர் புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் அவர்களது தாத்தா, பாட்டிகள் பட்டாசுகள் வெடித்தனர். வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டது. இரவை பகலாக்கும் வகையில் பட்டாசு வெளிச்சங்கள் இருந்தது. பட்டாசு சத்தங்கள் காதை பிளக்கும் வகையில் இருந்தன.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, குலசேகரம், குளச்சல், களியக்காவிளை, மார்த்தாண் டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் தீபாவளி பண்டிகையை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையடுத்து சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தோடு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    சொத்தவிளை கடற்கரை, வட்டக்கோட்டை கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மாலை பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பத்நாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
    • மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது.

    ஈரோடு,

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விட ப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடு வதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்து 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்க ப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறைய வில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்த தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையா மல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்க ப்பட்டது.

    அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்க ளுக்கு நாளை மறுநாளும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    பள்ளி திறப்பையொட்டி கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. விடு முறைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி வந்தனர்.

    இதேப்போல் முக்கிய கடை வீதிகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நோட்டு, புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படும் கடைகளில் கூட்டம் அதி கமாக இருந்தது. அதேநேரம் பள்ளி திறப்பையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளி களில் தூய்மை பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தன. பள்ளி வளாகம், வகு ப்பறைகள் தூய்மை ப்படுத்தப்பட்டன. பள்ளி திறப்பத ற்காக அனைத்து ஏற்பாடு களும் தயார் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக காலையிலேயே மாண வர்கள் குளித்து பள்ளி சீருடை அணிந்து பெற்றோர்களுடன் உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பினர்.

    மாணவிகளை வரவேற்கும் விதமாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்கு புதிதாக வந்த மாணவி களுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

    இதே போல் இன்னும் சில பள்ளிகளில் வாைழ தோரணங்கள் கட்டப்பட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் சாக்லேட் வழங்க ப்பட்டது. பள்ளி திறக்கும் நாளிலேயே மாண வர்களுக்கு பாட புத்தகம், நோட்டுகள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தன.

    அதன்படி இன்று மாண வர்களுக்கு நோட்டு, பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளும் உற்சாக த்துடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர். புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாண வர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படு கின்றன.

    • 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படடன.
    • உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டுகொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டன. இதற்கிடையே தேர்வு காலம் நெருங்கியதால் தேர்வுகள் நடத்தப்பட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) 1ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படடன.

    திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் போன்றவை அகற்றப்பட்டு வந்தன. இன்று காலை பள்ளி திறந்ததும் மாணவ மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர் செல்வி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை பின்பற்றும்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் பள்ளிக்கு வருகிற மாணவ-மாணவிகளை ஒவ்வொரு பள்ளி சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் தற்போது மாணவ-மாணவிகள் சேர்க்கையும் நடந்து வருகிறது. இது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    பள்ளிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

    • தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்ப டுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்ப ட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1-ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று கடை வீதிகளில் ஸ்கூல் பேக், நோட்டுப் புத்தகம் விற்பனை அமோகமாக இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ஈரோடு எஸ்.கே. சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சுமதி தலைமையில் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்தும், கதர் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிப்பும் வழங்கினர். இதேப்போல் பல்வேறு பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.

    பவானி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலர்தூவி நெற்றியில் திலகமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். திருமண வீட்டிற்கு வருபவர்களை வரவேற்பது போல் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்றனர். அரசு உதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளன.

    இதுபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி பெருந்துறை மொடக்குறிச்சி சத்யமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வழங்கக்கூடிய இலவச பாடப்புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. இன்று பள்ளிகள் தொடங்கினாலும் ஒரு வாரத்திற்கு மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த படாது என்றும் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்துணர்ச்சிக்கான வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பள்ளிகள் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ×