search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்
    X

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதியினர் புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் அவர்களது தாத்தா, பாட்டிகள் பட்டாசுகள் வெடித்தனர். வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டது. இரவை பகலாக்கும் வகையில் பட்டாசு வெளிச்சங்கள் இருந்தது. பட்டாசு சத்தங்கள் காதை பிளக்கும் வகையில் இருந்தன.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, குலசேகரம், குளச்சல், களியக்காவிளை, மார்த்தாண் டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் தீபாவளி பண்டிகையை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையடுத்து சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தோடு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    சொத்தவிளை கடற்கரை, வட்டக்கோட்டை கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மாலை பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பத்நாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    Next Story
    ×