search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் சுரங்கப்பாதை"

    • தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
    • தொழிலாளர்கள் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன.

    ரிஷிகேஷ்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 12-ந் தேதி அங்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கப்பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர்.

    அதனை தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்பு பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை 17-வது நாளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சுரங்கப்பாதையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழு, மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டது.

    இதைத் தொடா்ந்து, சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்சுகள் மூலம் அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் 41 தொழிலாளர்களும் விமானப்படையின் சினுக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தொழிலாளர்கள் அனைவரும் முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து அவர்கள் 41 பேரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.

    முன்னதாக தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் டாக்டர் ரவிகாந்த் "தொழிலாளர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி அறிக்கைகள் இயல்பாக உள்ளன. அவர்கள் உடல் ரீதியாக இயல்பானவர்கள். மருத்துவ ரீதியாக நிலையானவர்கள். அவர்கள் வீடு திரும்புவதற்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்" என்றார். 

    • எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.
    • மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது.

    கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலி வளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத்தக்கது.

    17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    உத்தரகாண்ட்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்காலிக மருத்துவ முகாமில் 41 தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், எய்ம்ஸில் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையடுத்து தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்காக இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    • சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்
    • 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சென்னை:

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் துயர்த்திற்குள்ளான நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி அறிவுரையின்படி பிரதமர் மோடி உதவியுடன் மழை, குளிர் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட பேரிடர் குழுவின் உதவியுடன் 17 நாட்கள் போராடி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    17 நாட்கள் போராடிய 41 தொழிலாளர்களின் உயிரை பத்திரமாக மீட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் கொடுத்த உத்தர காண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, பிரதமர் மோடி ஆகிேயாருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • எனது தந்தை பத்திரமாக மீட்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
    • தொழிலாளர்களில் ஒருவரான தீரன் நாயக்கின் தாய் கூறுகையில், சுரங்கப்பாதையில் இருந்து எனது மகனையும் மற்ற தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்றார்.

    உத்தரகாசி:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

    17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய மீட்பு படையின் அதிகாரி டாக்டர் ஷைலேஷ் குமார் சவுத்ரி தொழிலாளர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒருவரையொருவர் வாழ்த்தி கேக் துண்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

    இதுகுறித்து ஷைலேஷ் குமார் சவுத்ரி கூறுகையில் "தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதால் அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். எனது பிறந்தநாளைக் கொண்டாடும் போதெல்லாம், இந்த காட்சியையும் இந்த மீட்பு நடவடிக்கையையும் நான் நினைவில் கொள்வேன்" என்றார்.

    மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் கூறியதாவது:-

    41 தொழிலாளர்களில் ஒருவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம் மிலனின் மகன் சந்தீப் குமார் கூறுகையில், "எனது தந்தை பத்திரமாக மீட்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எனது தந்தையை அழைத்து வருவதற்காக எனது உறவினர்கள் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஷிரவஸ்தி பகுதியை சேர்ந்த தொழிலாளி சந்தோஷ் குமார் என்பவரின் தாய் கூறுகையில், "சந்தோஷிடம் போனில் பேசினோம், தற்போது மருத்துவ மனையில் இருக்கிறார். இன்று தான் தீபாவளி கொண்டாடினோம். மத்திய அரசுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் நன்றி" என்றார்.

    தொழிலாளிகளில் ஒருவரான பீகார் மாநிலம் சாப்ரா பகுதியைச் சேர்ந்த சோனுவின் தாயார் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரசு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் 2 நாட்களில் வீட்டுக்கு திரும்பி வருவேன் என்று என் மகன் தெரிவித்தார்" என்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியை சேர்ந்த தொழிலாளி மஞ்சித்தின் தந்தை கூறுகையில், "எனது மகன் பத்திரமாக மீட்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி" என்றார்.

    ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களில் ஒருவரான தீரன் நாயக்கின் தாய் கூறுகையில், சுரங்கப்பாதையில் இருந்து எனது மகனையும் மற்ற தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்றார்.

    அசாம் மாநிலம் கோக்ரஜார் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராம் பிரசாத் நர்சாரியின் தந்தை கூறுகையில், "சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைக் கேட்டு நான் நிம்மதி அடைந்தேன்" என்றார்.

    • டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 ‘எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்’ அழைத்துவரப்பட்டனர்.
    • ‘எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன’.

    உத்தர்காசி:

    நிலக்கரி சுரங்கங்கள் போன்றவற்றில் சட்டவிரோதமாக சிறிய சுரங்கங்கள் அமைத்து, அவற்றின் மூலம் நிலக்கரி திருடுவது சிலரின் வழக்கம்.

    சில அடிகள் முதல் பல அடிகள் வரை நீளும் இந்த குறுகிய, ஆபத்தான சுரங்கங்களில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த சுரங்கங்கள் 'எலி வளை சுரங்கங்கள்' என்றும், அவ்வாறு சுரங்கம் தோண்டுவோர் 'எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள்' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    இது சட்டத்தை மீறிய செயல் என்பதால், பிடிபட்டால் சிறை நிச்சயம். அத்துடன் சமயங்களில் இந்த எலி வளை சுரங்கங்களில் திடீரென தண்ணீர் புகுவது, இடிந்து விழுவது போன்றவற்றால் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டு பலியாகும் பரிதாபமும் நடக்கும்.

    ஆனால் இந்த 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' தான் உத்தரகாண்ட் சுரங்கப்பாதை இறுதிக்கட்ட மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.

    இந்தப் பணியை மேற்கொள்ள இவர்கள்தான் சரியானவர்கள் என்று சுரங்கப்பாதை கட்டுமான பணியை மேற்கொண்ட நவயுகா என்ஜினீயரிங் நிறுவனம் முடிவு செய்தது.

    அதையடுத்து டெல்லி, ஜான்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' அழைத்துவரப்பட்டனர். அவர்கள் குழாய்களுக்கு சென்று, 10 மீட்டர் இடிபாடுகளுக்குள் 24 மணி நேரத்துக்குள் துளையை ஏற்படுத்திவிட்டனர். இது மீட்பு படையினர் எதிர்பார்த்ததையும் விடவும் மிகவும் குறைவான நேரம் ஆகும். அத்துடன் இந்த தொழிலாளர்கள் பயன்படுத்தியது மண்வெட்டி, சிறிய கருவிகள் போன்ற எளிய சாதனங்கள்தான்.

    'எலி வளை சுரங்கம் அமைப்பது சட்டவிரோதமாக இருக்கலாம். ஆனால் அந்த தொழிலாளர்களின் அனுபவமும், திறமையும்தான் கடைசியில் கைகொடுத்தன' என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சையத் அடா ஹஸ்னைன் பாராட்டு தெரிவித்தார்.

    ஆக, சட்டவிரோத செயலை செய்பவர்களாக கருதப்படும் 'எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள்' உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் மூலம் ஒரே நாளில் 'ஹீரோக்கள்' ஆகிவிட்டனர்.

    • மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.

    ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது.

    மீட்புப் பணியில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×