search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு: பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் நன்றி
    X

    41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு: பிரதமர் மோடிக்கு ஏ.சி.சண்முகம் நன்றி

    • சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்
    • 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    சென்னை:

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கத்தில் தீபாவளியன்று ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் துயர்த்திற்குள்ளான நிலையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி அறிவுரையின்படி பிரதமர் மோடி உதவியுடன் மழை, குளிர் சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட பேரிடர் குழுவின் உதவியுடன் 17 நாட்கள் போராடி தொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

    17 நாட்கள் போராடிய 41 தொழிலாளர்களின் உயிரை பத்திரமாக மீட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வும் கொடுத்த உத்தர காண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி, பிரதமர் மோடி ஆகிேயாருக்கு புதிய நீதிக்கட்சியின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×