search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குனர் கவுதமன்"

    திரைப்பட இயக்குனர் கவுதமனின் தந்தை மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    திரைப்பட இயக்குனர் கவுதமனின் தந்தை வடமலை உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன்.

    அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தந்தையை இழந்து வாடும் கவுதமனுக்கும், அவரது உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்கிவிடும் வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கடுமையாகவும், உறுதியாகவும் போராடிய அவரின் மறைவு சமத்துவ போராளிகளுக்கு பேரிழப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin
    எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன் என்று டைரக்டர் கவுதமன் தெரிவித்துள்ளார். #Gowthaman #Rajinikanth
    சென்னை:

    சினிமா டைரக்டர் கவுதமன் அரசியல் பிரவேசம் செய்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக யார்-யாரோ வருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். இதற்காக புதிய அரசியல் கட்சியை தான் தொடங்க உள்ளேன்.

    தை பொங்கலுக்கு பிறகு நடைபெறும் கட்சியின் மாநாட்டில் பெயரும், கொடியும், கொள்கைகளும் அறிவிக்கப்படும்.
    நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மதிப்புமிக்க கலைஞர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த மண்ணை ஆள தகுதி இல்லை. விஸ்வரூபம் படம் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறிய கமல் இந்த நாட்டை எப்படி காப்பாற்றுவார்.

    ரஜினிகாந்தையும் எப்போதும் ஏற்க முடியாது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.

    தொடர்ந்து இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழினம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. எந்த வகையிலும் சம்பந்தமில்லாதவர்கள் எங்களை ஆண்டதும், ஆள நினைப்பதும் இனி ஒரு போதும் நடக்காது.

    இவ்வாறு கவுதமன் கூறினார்.  #Gowthaman #Rajinikanth
    நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடந்துள்ளது போல் 8 வழிச்சாலை வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும் என்று இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார். #ChennaiSalemGreenExpressway
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் குளுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த ஆண்டு நீட்தேர்வு பிரச்சனையில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அந்த கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன், தமிழக அரசை கண்டித்தும், வன்முறையை தூண்டும் விதத்திலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்தவழக்கு அரியலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராவதற்காக கவுதமன் இன்று அரியலூர் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இதற்கான விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    மேலும் இயக்குனர் கவுதமன் மீதான 19 வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கிய சென்னை ஐகோர்ட்டு, அவர் அரியலூரில் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. அதன்பேரில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. அந்த வழக்குகளை நான் சட்டப்படி சந்திப்பேன். கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதில் ஏராளமான தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


    இந்த சோதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் இவ்வளவு ஊழல் நடந்துள்ளது போல் 8 வழிச்சாலை வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiSalemGreenExpressway #Gowthaman
    ×