search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட்"

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இதில் 1. ரோகித் சர்மா, 2.தவான், 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பந்த்,  6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10, புவனேஸ்வர் குமார், 11. பும்ரா, 12. கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் கலீல் அகமதிற்கு இடம் கிடைக்காது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் குருணால் பாண்டியா அல்லது சாஹல் ஆகியோரின் ஒருவருக்கு இடம் கிடைக்காது.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். #AUSvIND
    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. டி20 தொடர் முடிந்த உடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டு தடையால் பங்கேற்க இயலாது. இதனால் இந்திய அணிக்கு அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.



    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரன்கள் குவிக்கலாம். அதன்மூலம் அணி வெற்றியை ருசிக்கும்.

    ரோகித் சர்மா கட்டாயம் ஆடும் லெவன் அணியில் இடம்பெற வேண்டும். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் வெளியே இருக்கக்கூடாது. இந்த கருத்தை நான் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன்’’ என்றார்.
    ×