search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய சாலைகள்"

    • 2021ல் நடந்த விபத்துகளை விட 2022ல் 9.4 சதவீதம் அதிக விபத்துகள் நடந்துள்ளன
    • இந்தியாவில் ஒரு நாளில் சுமார் 460 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்

    உலக மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியாவில்தான், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    2021-ஆம் ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், 2022ல் சாலை விபத்துகள் 9.4 சதவீதம் அதிகம் என்றும் இந்தியாவின் சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உயிரிழந்த 10 பேரில் 7 பேர், வேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியதையும் இந்த ஆய்வு சுட்டி காட்டுகிறது.

    ஒவ்வொரு நாளும் 462 பேர் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 19 பேர் எனும் எண்ணிக்கையில் சாலை விபத்துகளில் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர்; சுமார் 4 லட்சத்து 43 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்துகளில் பல, முன்னால் செல்லும் வாகனத்தின் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதுவதாலும், "ஹிட் அண்ட் ரன்" (hit and run) எனப்படும் ஒரு வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விடும் விபத்துகளினாலும் நடைபெறுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    இந்திய பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) இதன் காரணமாக 5லிருந்து 7 சதவீத இழப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் என்றும் 18லிருந்து 60 வயது வரை உள்ள அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள் என்றும் உலக வங்கியின் ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.

    "குடிமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. அவர்கள் குணம் மாற வேண்டும்" என சாலை விபத்துகள் குறித்து இந்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் தெரிவித்தார்.

    கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம்
    • மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நாட்டில் உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 2024ம் ஆண்டு இறுதிக்குள் நமது சாலை உள்கட்டமைப்பானது அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும்.

    நமது தளவாட செலவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. தற்போது, இது 16 சதவீதமாக உள்ளது, ஆனால் 2024 இறுதி வரை, ஒற்றை இலக்கமாக, 9 சதவீதம் வரை கொண்டு செல்வோம் என உறுதி அளிக்கிறேன்.

    கட்டுமானத் தொழில் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய பொருட்கள் மற்றும் வளங்களில் 40 சதவீதத்தை பாதுகாக்கிறது. வளங்களின் விலையைக் குறைப்பதிலும் கட்டுமானத்தின் தரத்தை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம். சிமென்ட் மற்றும் இரும்பு ஆகியவை கட்டுமானத்திற்கான முக்கியமான பொருட்கள் என்பதால் மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானப் பணிகளில் இரும்பு பயன்பாட்டைக் குறைக்க முயற்சிக்கிறோம்.

    தூய எரிசக்தியான பசுமை ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருள். இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்காலத்தில், விமானம், ரெயில்வே, சாலை போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் தொழில்களில் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×