search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் தின விழா"

    • சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன
    • ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வ பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தின விழாக் கொண்டாடப்பட்டது. அதற்குப் பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் தினத்தை கருப்பொருளாகக் கொண்டு கவிதை, நோக்க வுரை, நடனம், சிறப்புப் பாடல் போன்ற நிகழ்வு மாணாக்கர்களால் நடத்தப்பட்டன. அதோடு மாணாக்கர்கள், ஆசிரியர்க ளாகவும், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் போல் வேடம் புனைந்து மழலையர் பிரிவினரும் ஒவ்வொரு வகுப்பிற்கும்சென்று பாடம் நடத்தியது அனைவரும் பாராட்டும்விதமாக இரு ந்தது. குறிப்பாக, ஹை-டெக் வகுப்பறையில் லே ப்டாப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் கற்றதும்- கற்பித்ததும் சிறப்பாக இருந்தது.ஆசிரியர்களை மகிழ்வி ப்பதற்காக மாணா க்கர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதும், ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்புப் போடடிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பள்ளித் தலைவர் சிறப்பு பரிசுகள் வழங்கினார்.

    • ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார்
    • டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கா ன்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைைம தாங்கினார்.

    மாணவி வித்யா சரோஜினி வரவேற்று பேசினார். மாணவிகள் அதிதி, தர்ஷனா மற்றும் தனிகா வரவேற்பு நடனம் ஆடினார். மாணவி ஆஷிகா ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்.

    பள்ளி முதல்வர் டாக்டர் பீட்டர் ஆன்றனி சுரேஷ் ஆசிரியர் தின உரையாற்றி ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி யினை நடத்தினார். பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி புத்தாடை வழங்கி கவுரவித்தார். மேலும் ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட் பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார்.

    முடிவில் மாணவன் லிரிஷ் நன்றி கூறினார். விழா நிகழ்வுகளை மாணவி அத்வைதா மற்றும் மாணவன் பெரிஷ் மத்தியூ தொகுத்து வழங்கினர். விழா ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி டெல்பின் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், அஸ்ரபா, ஷீலா மற்றும் கல்வி ஒருங்கி ணைப்பாளர் முத்துசிவம் இணைந்து செய்திருந்தனர்.

    விழாவில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பூங்கொ த்து கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்து கூறினர்.

    • வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
    • விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்.

    அவர் பேசும் போது டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கி உழைப்பால் எவ்வாறு குடியரசு தலைவராக உயர்ந்தார் என விளக்கி பேசினார். அதே போல எதிர்கால சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டிய சேவை குறித்து விளக்கி பேசினார்.

    தொடர்ந்து ஆசிரியர்க ளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் மூர்த்தி முதல் பரிசும், அருண்பிரசாத் 2-ம் பரிசும், செல்வராஜ் 3-ம் பரிசும் பெற்றனர்.

    ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டியில் சிந்து முதல் பரிசும், நசீமா பேகம் 2-ம் பரிசும், அம்ரீன் 3-ம் பரிசும் பெற்றனர்.

    இந்த விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சந்தோஷ் ஆசிரி யர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர் பாஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகள் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது- இதற்கு கல்வி நிறுவ னங்களின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வள்ளி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தனது வாழ்த்துரையில், அனைத்து பேராசிரியர்களும் தங்க ளின் பொறுப்புகளை உணர்ந்து அர்ப்பணிப்பு எண்ணத்துடன் பணி யாற்றிட வேண்டும்.

    அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்களை கற்று மாணவர்களுக்கு புதிய முறையில் கல்வி கற்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ஆசிரியர் தினத்தை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு களும், அனைத்து ஆசிரி யர்களுக்கும் நினைவு பரிசுகளை கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் வழங்கினார். இதில் கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழாய்வுத் துறை சார்பாக ஆசிரியர் தினவிழா கொண்டா டப்பட்டது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

    ஓசூர், 

    ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பாக ஆசிரியர் தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆசிரியர் பணி அறப்பணி என்றும் ஆசிரியர்கள் மட்டும்தான் தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.

    மாணவர்களை ஒவ்வொரு நாளும் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவர்களின் வளர்ச்சியில் தூண்போன்று நிற்கிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் காலம் முழுவதும் தனக்காக இல்லாமல் மாணவர்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றனர் என்றார்.

    நுண்ணுயிரியல் துறைத்தலைவர் யுவராஜ் பேசும்போது,சமூகம் சீர்பட ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஆசிரியர்கள் துணை நின்றிருப்பார்கள். மாணவர்கள், ஆசிரியர்களாக உருவாக முன்வர வேண்டும்என்றார்.

    தமிழ்த்துறைத் தலைவர் லட்சுமி,மனதில் நின்ற ஆசிரியர் என்ற தலைப்பில் பேசுகையில், மாணவர்கள், ராதாகிருஷ்ணன், அம்பேத்கார், அப்துல்கலாம். அரிஸ்டாட்டில் போன்றோரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும், ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்துறைப் பேராசிரியர் சிவக்குமார் விழாவில் பேசினார். மாணவர் பவானிராஜ் ஆசிரியப்பணிகள் குறித்து கவிதை வாசித்தார். மாணவி சவுமதி இக்கால ஆசிரியர்கள், அக்கால ஆசிரியர்கள் எனும் தலைப்பில் உரையாடினார். மேலும், திரிஷா என்ற மாணவி, ஆசிரிய சமுதாயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார்.

    முடிவில் பேராசிரியர் திலிப்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • அனைவரையும் தலைமை ஆசிரியர் பாராட்டினார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் விஜய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா தாளாளர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது.

    இதில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதேபோல் ராமசாணிக்குப்பம்ஊ ராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன் கலந்து கொண்டு பள்ளி ஆசிரியர்கள் உள்பட மாணவ மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கினார்.

    இதில் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி பிடிஏ ஆசிரியர்கள் நளினி, சசிகலா, சுமதி, ரேகா, தனி ஆசிரியர் ஜெயந்தி, வனிதா, பவானி, கிருஷ்ணவேணி உள்பட அனைவரையும் பாராட்டினார்.

    • ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
    • பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ஓசூர், 

    ஆசிரியர் தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, ஓசூரில் மாநகராட்சி கல்விக்குழு சார்பில் அரசு ஆர்.விஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப், உருது மேல்நிலைப்பள்ளி, முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் புருஷோத்தம ரெட்டி, யசஸ்வினி மோகன், மோசின் தாஜ் நிசார் அகமது உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினர்கள், மேலாண்மைக்குழு துணைத் தலைவர் ஏஜாஸ் அகமது, தி.மு.க. பகுதி செயலாளர் ராமு, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியையர் ,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவின்போது, மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டி நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    ×